- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 31 comments and to comment



யேய் சிபி..ஒருவேளை நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்காம போச்சுன்னா நீ வேற கல்யாணம் பண்ணிப்பியாடா...?

ஈவினிங் ஆறு மணி...பீச் காத்து...பக்கத்துல வேற யாரும் இல்ல..ஏண்டி இப்டி அபத்தமா பேசற....காலம் காலமா இந்த மாதிரி சிட்டுவேசன்ல லவ்வர்ஸ் என்ன பண்ணுவாங்களோ அத மட்டும் பண்ணுவோம் நாம...குட்டி.,குட்டி.. நேத்து பார்த்த இங்க்லீஷ் படத்துல ஒரு நச்ச் கிஸ் சீன் வந்துச்சுன்னு சொன்னேன்ல..அத எப்டி இருந்துச்சுன்னு நடிச்சு காட்டவா...?

அவன் கண்ணை பார்த்து மறுபடியும் கேட்டா..! நீ பர்ஸ்ட் இதுக்கு பதில் சொல்லு.. ஒரு வேலை நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கலைனா, நீ வேற கல்யாணம் பண்ணிபியா மாட்டியா...?

ஆங்..வெல்..ஹவ் டு சே தட் ...! குட்டி சொக்கா இருந்தா...அப்டியே உஷார் பண்ணி கல்யாணத்த பண்ணிட்டு டார்ஜிலிங், சிம்லான்னு ஒரு ரவுண்ட் சூடா  போயிட்டு போயிட்டுரலாம்தான்..விடு மச்சி...அதுக்கெல்லாம் குடுத்து வெச்சிருக்கணும்...எனக்கு அதிர்ஷ்ட்டம் இல்ல..சொல்லிட்டு சிரிச்சுகிட்டே  ஓரக்கண்ணால சைந்தவிய நக்கலா பார்த்தான் சிபி... 

நீ கல்யாணம் பண்ணிக்கடா...நீ சந்தோசமா இருக்கணும்...நான் இல்லைனா கூட நீ சந்தோசமா இருக்கணும்...என் சிபி வாழ்க்கை பூரா சந்தோசமா சிரிச்சுகிட்டே மட்டும் இருக்கணும்..நான்னு இல்லடா..என் சிபி எந்த பொண்ணு வந்தாலும் அவள சந்தோசமா வெச்சுப்பான்..எனக்கு தெரியும்..என் சிபிய பத்தி எனக்கு நல்லா தெரியும்...உன்ன மாதிரி ஒரு நல்ல புருஷன் ,எனக்கு கெடைக்கலங்கற ஒரே காரணத்துனால இன்னொரு பொண்ணு மிஸ் பண்ணிற கூடாது..நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ...!

யேய் ச்சீ..என்னடி லூசு மாதிரி என்னனமோ பேசற...நான் எதோ வெளாட்டுக்கு உன்ன வம்புக்கு இழுக்கறதுக்காக சொன்னேன்ப்பா...!

இல்ல சிபி.நேத்து ஏன் பிரெண்ட் அவ லவ் பெய்லியர்  பத்தி சொல்லிட்ட்ருந்தா.. அப்போலேர்ந்து ஏன் மைண்ட்ல இது மட்டும்தான் ஓடிட்ருக்கு....திடீர்னு எனக்கு எதாச்சும் ஆய்ட்டா நீ என்ன நெனைச்சுகிட்டே உன் லைப வேஸ்ட் பண்ணிற கூடாதுல்ல..அதான் இப்பவே சொல்றேன்..ஒரு வேலை நமக்கு கல்யாணம் ஆகலைனா   நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ...!

யேய் லூசு..என்னாச்சுடி  உனக்கு இன்னிக்கு...நமக்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்...ஞாபகம் இருக்கா இல்லையா உனக்கு..?

ஹ்ம்ம்..!

ஏன் குட்டி..,ஒரு வேலை நீ வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னை பத்தி அவகிட்ட சொல்லுவியா...?

யேய்..நான் ஏண்டி நடுராத்திரி மூணு மணிக்கு விஜய் படத்துக்கு போகபோறேன்..? ஏண்டி என்னனமோ சொல்லி என்னை இப்போ கொழப்பர ...?

இல்ல குட்டி சொல்லேன்..ஒரு வேலை உனக்கு இன்னொரு பொண்ணோட கல்யாணம் ஆகி, அவகூட வாழ்ந்துட்ருக்கும்போது அவகிட்ட சைந்தவின்னு ஒரு லூசு பொண்ணு என்னை உயிருக்குயிரா காதலிச்சான்னு சொல்லுவியா...?

சிபி சிரிச்சான்...யேய்..என்னாச்சுடி உனக்கு இன்னிக்கு...?

இல்ல நீ சொல்லேன்..நீ அவகிட்ட என்னை பத்தி சொல்லுவியா மாட்டியா...?

சரி நீயே சொல்லு...உன்னபத்தி அவகிட்ட சொல்லவா வேணாமா...?

கடல்காற்று வேகத்தை குறைத்து சைந்தவியை கவனிக்க ஆரம்பித்தது..

“சொல்லாதடா..நான் உன்ன எவ்ளோ லவ் பண்ணேன்னு தெரிஞ்சா அந்த பொண்ணால தாங்கிக்க முடியாது...!

தேம்ப ஆரம்பித்தாள் சைந்தவி...

யேய்..என்னாச்சுரி உனக்கு..ஏன் இப்டியெல்லாம் பேசற...? சைந்தவி கம் ஆன்..வாட்ஸ் ராங் வித் யூ...?

சிபி நான் ஒன்னு சொல்லுவேன் செய்வியா..?

தேம்பல் அதிகமாகி இருந்தது சைந்தவியிடம்...

சொல்லுடி...!

நான் இல்லைனா கூட நீ வேற ஒரு கல்யாணம் பண்ணிக்காதரா..ப்லீஸ்ரா...அப்பறம் நீ என்னை மறந்துருவ...அத என்னால தாங்கிக்க முடியாது...!

உடைந்து அழ ஆரம்பித்தால் சைந்தவி...

எதுவும் சொல்ல தோணாமல் அவளை கட்டியணைத்த சிபியின் கண்ணீர் சைந்தவியை நனைத்தது...!

முத்த மழை தூத்தல் போட ஆரம்பித்தது...!
*************************************************************************
பீச் காத்துல, லவ்வர்ஸ் அழுதுகிட்டே கட்டிபுடிச்சுகிட்டு குடுக்கற கிஸ்ஸ விட டேஸ்ட்டான  கிஸ் உலகத்துலேயே இருக்க முடியாதுங்க...!
  
வேணும்னா இந்த ஜோடிகிட்ட கேட்டு பாருங்களேன்...

ஊடலும், பின் கூடலும், அதன் பின் காம தேடலுமே-- "காதல்"..!
***************************************************************************
A Veliyoorkaran Article.

31 Responses so far.

  1. @@@ All new readers..//

    Please visit Chocolate Pages Link in this home page for the complete story.

    http://veliyoorkaran.blogspot.com/2011/08/i-love-you-sainthavi-by-sibi.html


    Enjoy Chocolate Pages.! :)

  2. vinu says:

    யேய்..நான் ஏண்டி நடுராத்திரி மூணு மணிக்கு விஜய் படத்துக்கு போகபோறேன்..? ஏண்டி என்னனமோ சொல்லி என்னை இப்போ கொழப்பர ...?


    appluase.....

  3. vinu says:

    yow velliyoor ennyaa ippudi pottu kulappureyyyyyyyyyyyyy.....

    no aluvaachi inbetween @sibi & sainthavi......

    pichupp puduvvean pichchuuuuuu

  4. Anonymous says:

    அழவைக்ராங்கடா காலன்கார்தல !!

  5. @@@vinu says:
    yow velliyoor ennyaa ippudi pottu kulappureyyyyyyyyyyyyy.....
    no aluvaachi inbetween @sibi & sainthavi......
    pichupp puduvvean pichchuuuuuu.///
    *******************************
    @Vinu..//

    Your feedback accepted machi.!

    இனிமே எந்த பதிவுலயும் சைந்தவியும் சிபியும் அழ மாட்டாங்க...ஒன்லி ரொமான்ஸ்தான்...! :)
    ************************************

    @Rettaivals //

    மச்சான் நீ அப்பவே சொன்ன...சைந்தவிய பத்தி எழுதும்போது மட்டும் பார்த்து யோசிச்சு எழுதுறா...எங்கயாச்சும் கதைல மிஸ் ஆனா அவென் அவென் தான் தங்கச்சிய தப்பா பேசுன மாதிரி டென்சன் ஆய்ருவானுகன்னு...! லைட்டா அழுவறா மாதிரி எழுதுனதுக்கே இப்டி கொந்தளிக்கிரானுகளே மச்சி...! யாருதான் மச்சான் அந்த பிகர் சைந்தவி...? :)
    ********************************

  6. @@@பனங்காட்டு நரி said...
    அழவைக்ராங்கடா காலன்கார்தல !!//

    சரி விடு மச்சி...அழாத.! மொதொள்ள போய் ரெண்டு குயர் நோட்டு வாங்கி ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதி பழகு...! :)

  7. Unknown says:

    ஏன்?
    எதுக்கு?
    எப்பிடி?
    எதனால?
    என்னாச்சு?
    ஏன் சைந்தவி இப்பிடி?
    வேணாம் இது நல்லா இல்ல!

  8. @@@ஜீ... says:
    ஏன் சைந்தவி இப்பிடி?
    வேணாம் இது நல்லா இல்ல!///

    டேய்..வேணாம்டா..விட்ருங்க...!

    இந்த பதிவு நல்லா இல்ல..தெரியாம எழுதிட்டேன்...ஒத்துக்கறேன்..!:)

    இனிமே இந்த மாதிரி எழுத மாட்டேன்...போதுமா...!

    ங்கொய்யால சுத்தி விட்டு அடிக்கிரானுகளே..! :) :)

  9. Veliyoorkaran said...

    டேய்..வேணாம்டா..விட்ருங்க...!

    இந்த பதிவு நல்லா இல்ல..தெரியாம எழுதிட்டேன்...ஒத்துக்கறேன்..!:)

    இனிமே இந்த மாதிரி எழுத மாட்டேன்...போதுமா...!

    ங்கொய்யால சுத்தி விட்டு அடிக்கிரானுகளே..! :) :)//

    மச்சி அப்பிடியெல்லாம் நீயே முடிவு பண்ணகூடாது.. எதுக்கு உறவுகாரங்க நாங்க இருக்கோம்? எங்கள்ட்ட கேட்டு செய்யணும் என்ன? இதுவும் நல்லாத்தான் இருக்கு.. என்ன? வேணா கடைசில ப்ளான் பண்ணி சிபிகிட்ட சண்டை இழுத்தமாதிரி சீன் வச்சிரு.. அப்புறம் பாரு ரொமான்ச :))

  10. vinu says:

    மச்சி இன்னைக்கு காலைலதான் 16 நாளைக்கு அப்புறம் என்னோட ஆளுகிட்டே இர்ருந்து ஒரு sms வந்துச்சுன்னு காலைல இர்ருந்து சந்தோசத்துல மிதந்துகிட்டு இர்ருகேன்....இங்கிட்டு வந்துப் பார்த்தா ஒரே அழுவாச்சியா இருக்கு....

    வேணாம் வேணாம் வலிக்குது... உதைபடுவே படுவா....

    ஒயுங்கா அல்லாரும் சந்தோசமா இர்ருகோனும்.... சரியா

  11. // vinu said...
    மச்சி இன்னைக்கு காலைலதான் 16 நாளைக்கு அப்புறம் என்னோட ஆளுகிட்டே இர்ருந்து ஒரு sms வந்துச்சுன்னு காலைல இர்ருந்து சந்தோசத்துல மிதந்துகிட்டு இர்ருகேன்....இங்கிட்டு வந்துப் பார்த்தா ஒரே அழுவாச்சியா இருக்கு....

    வேணாம் வேணாம் வலிக்குது... உதைபடுவே படுவா....

    ஒயுங்கா அல்லாரும் சந்தோசமா இர்ருகோனும்.... சரியா///

    விடு மச்சி அடுத்த பாகத்துல கம்ப்ளீட் ரொமான்ஸ்தான் இருக்கும்.... :))

    இதுவும் நல்லாதான் இருக்கு என்ன கொஞ்சம் ஃபீலிங்கா இருக்கு பாஸ்....

    நாங்க சைந்தவி & சிபி கிட்டயிருந்து ஒன்லி ரொமான்ஸ்தான் எதிர்பாக்குறோம்...

    இவண்
    சைந்தவி ஃபேன்ஸ் கிளப்
    (சிங்கை கிளை)
    :)

  12. vinu says:

    இவண்
    சைந்தவி ஃபேன்ஸ் கிளப்
    (பாங்களூர் கிளை) ;)

  13. யோவ்! இந்த தமிழ் சினிமா பிளாஷ்பேக் மாதிரி ஏதாவது அழுகாச்சி, அப்புறம் அம்மா உம்மாச்சிகிட்ட-ன்னு வந்தது...தேடி வந்து உதைப்போம்... சிபியும், சைந்தவியும் எப்பவும் ஜாலியா இருக்கணும்... நான் என் பொண்டாட்டிகிட்ட இதை படிச்சு சொல்லி சொல்லி சிரிக்கிற மாதிரி, அப்படியே கண்டினியூ ஆகணும்... - சிபி-சைந்தவி உட்லண்ட்ஸ் ரசிகர் மன்றம், சிங்கை.

  14. @வெளியூர்

    //நீ கல்யாணம் பண்ணிக்கடா...நீ சந்தோசமா இருக்கணும்...நான் இல்லைனா கூட நீ சந்தோசமா இருக்கணும்...என் சிபி வாழ்க்கை பூரா சந்தோசமா சிரிச்சுகிட்டே மட்டும் இருக்கணும்..நான்னு இல்லடா..என் சிபி எந்த பொண்ணு வந்தாலும் அவள சந்தோசமா வெச்சுப்பான்..எனக்கு தெரியும்..//

    ராசா!! நீ கதைய மட்டும் எழுது உன் சொந்த கதை எல்லாம் இங்க சொல்ல கூடாது. காலம் காலமா இப்படி பேசிதான் கொல்ராளுங்க. இங்கையும் அதையே படிக்கனுமா? அதனால கற்பனையில நீ காதலிக்கிற சைந்தவிய பற்றி மட்டும் எழுதினால் போதும்... :)

    (பொண்டாட்டி கிட்ட அடி வாங்கி சாவு..)

  15. @வைகை & மாணவன்

    //மச்சி அப்பிடியெல்லாம் நீயே முடிவு பண்ணகூடாது.. எதுக்கு உறவுகாரங்க நாங்க இருக்கோம்? எங்கள்ட்ட கேட்டு செய்யணும் என்ன? இதுவும் நல்லாத்தான் இருக்கு.. //

    //இதுவும் நல்லாதான் இருக்கு என்ன கொஞ்சம் ஃபீலிங்கா இருக்கு பாஸ்....//

    அடிங்... என்னாட இரண்டு பேரும் ஏத்தி விடறிங்க? தரித்திரத்தின் .. ச்சீ.. சரித்திரத்தின் பக்கங்களை புரட்டி பார். வெளியூர் ப்ளாக் வந்து எல்லாம் சிரிச்சிட்டுதான் போவான் (பல சமையம் அவனை காறி துப்பி சில சமயம் பதிவை படிச்சி)... :)

  16. vinu says:

    machi naan oru episode eluthattaaaaa plzzzzzzz....

    oru one line irruku....
    send me ur mailid...
    b4 i publish i will send it to u!!!!

  17. @வெளியூர்

    //machi naan oru episode eluthattaaaaa plzzzzzzz....//

    மச்சி! ப்ளீஸ் இதை எல்லாம் படிக்கிற அளவு என் மனசுல சக்தி இல்லைடா... நீ தயவு செஞ்சி ப்ளாக் முடிட்டு ஊருக்கு போய்டு... :))

  18. vinu says:

    /////TERROR-PANDIYAN(VAS) said...

    மச்சி! ப்ளீஸ் இதை எல்லாம் படிக்கிற அளவு என் மனசுல சக்தி இல்லைடா... நீ தயவு செஞ்சி ப்ளாக் முடிட்டு ஊருக்கு போய்டு... :))

    //////

    goyyaalaaa....enakkup permission mattum kidaikattumm..... appaala neeyea unn mooku mela viral vaikkura maathiri senjukk kaaturean...... i meant pathivu / story sollureannu solla vanthean.....


    unakkup poraamai machiiii

  19. @@@vinu said...
    goyyaalaaa....enakkup permission mattum kidaikattumm.....///

    நீ எழுது மச்சி..! ///

    veliyoorkaran@gmail.com

    Waiting for a cute story from you..!

    :)

  20. @Vinu

    //appaala neeyea unn mooku mela viral vaikkura maathiri senjukk kaaturean...... //

    அதான் உயர் அதிகாரி ஒ.கே சொல்லிட்டாரு இல்லை. நீ கலக்கு மச்சி. நீ திவ்யாவுக்கு ச்சீ.. சைந்தவிக்கு எழுத போகும் காதல் காவியத்தை அள்ளி பருக காத்து இருக்கும்.... :)

  21. vinu says:

    ///TERROR-PANDIYAN(VAS) said...

    அதான் உயர் அதிகாரி ஒ.கே சொல்லிட்டாரு இல்லை. நீ கலக்கு மச்சி. நீ திவ்யாவுக்கு ச்சீ.. சைந்தவிக்கு எழுத போகும் காதல் காவியத்தை அள்ளி பருக காத்து இருக்கும்.... :)//////


    gouaala venaam venaaammm...... naaney innum oru vaarththaikooda pesamudiyalainnu kaduppula irrukean..... neee vera.....

    poyaa!!!!

    unakkellaam nichayamaana afternoon itself marriage aagidanum... mavaney saavudaa neee!!!!!

  22. vinu says:

    @Veliyoorkaran said...
    நீ எழுது மச்சி..! ///

    Thanks machi within a day or two will send it!!!!

  23. vinu says:

    sorry for the delay machi...

    எதோ என்னால முடிஞ்சது ட்ரை பண்ணி இர்ருகேன் திட்டாத மச்சி உனக்கு பிடிச்சு இர்ருந்தா போஸ்ட் பண்ணு இல்லாட்டி ஓகே மா!

  24. இதெல்லாம் எப்படா எழுதுனீங்க? இன்னும் பதிவுகள் ஓடிகிட்டு தான் இருக்கா...

  25. ஓ இன்னும் எவனும் உனக்கு பொண்ணு கொடுக்கலையோ? கொடுத்திருந்தா எழுத நேரமில்லாம நாங்க தப்பிச்சிருப்போம். ;-)

  26. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்வையிடவும் :-)

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_26.html

    தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

  27. காதலர்கள் உள்ளே உள்ள அருமையான காதலை சொல்லிய பகிர்வு... வாழ்த்துக்கள்...

    வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...

  28. வலைச்சரத்தில் உங்களைப் பற்றிய அறிமுகம் கண்டேன்.

    உங்கள் அனைத்துப் பதிவும் நல்ல நகைச்சுவையாக இருக்கிறது.

    தொடர்ந்து எழுதவும்!

    வாழ்த்துகள்!

  29. @@@Rettaival's Blog says:
    வலைச்சரத்தில் உங்களைப் பற்றிய அறிமுகம் கண்டேன்.
    உங்கள் அனைத்துப் பதிவும் நல்ல நகைச்சுவையாக இருக்கிறது.
    தொடர்ந்து எழுதவும்!
    வாழ்த்துகள்!/////

    தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி..இது போன்ற பாராட்டுக்கள் என்னை போன்ற வளரும் பதிவர்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது...! தங்கள் பணி தொடர வேண்டுகிறேன்....! :)

  30. @@@மாய உலகம் said...
    காதலர்கள் உள்ளே உள்ள அருமையான காதலை சொல்லிய பகிர்வு... வாழ்த்துக்கள்...
    வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...///


    மிக்க நன்றி...என்னை போன்ற சிறு பதிவர்களை கைதூக்கி விடும் உங்களை போன்றோரின் முயற்சி பாராட்டுக்குரியது....! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...! :)

  31. @@@@ஆமினா said...
    உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்வையிடவும் :-)

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_26.html
    ////////////

    எனக்கு தமிழை தவிர வேற எந்த மொழிகளும் தெரியாது என்ற காரணத்தால் என்னால் தங்கள் பதிவை சுத்தமாக புரிந்து கொள்ள முடியவில்லை...தயவு செய்து நீங்கள் அந்த பதிவில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தமிழில் ஒரு முறை எழுதி எனக்கு கடிதம் அனுப்பவும்...! :)