எனக்கு பெருசா எதுவும் வேணாம்டா..நீ சாப்டும்போது உன் கைய்யால ஆசையா ஒரு வாய் எனக்கு ஊட்டிவிடு..எனக்கு அது மட்டும் போதும்..காலம் புல்லா உன்னோட வாழ்ந்துட்டு ஒரு நாள் சந்தோசமா செத்து போயிருவேன்..ஜீன்ஸ் டி.ஷர்ட் போட்டுக்கிட்டு என் சைந்தவி ஒரு நாள் என் கண்ணபார்த்து சொன்னப்போ எனக்கு ஒரு விஷயம் தோனுச்சு..ஜீன்ஸ் டி ஷர்ட் போட்டுக்கிட்டு பொண்ணுங்க என்னதான் மாடர்னா காமிச்சுகிட்டாலும் பொண்ணுங்க பொண்ணுங்கதான்னு...மனசுக்கு புடிச்ச புருசன ஒரு பொண்ணால காதலிக்க முடிஞ்ச அளவுக்கு ஒரு பையனால தான் காதல் பொண்டாட்டிய காதலிக்க முடியாதுன்னு...சைந்தவி அவ காதலால என் காதல தோக்கடிச்சுகிட்டே இருக்கா...ஒவ்வொரு தடவையும்...
வாழ்க்கை அழகு பாஸ்...அதுவும் சைந்தவிங்க கெடைச்ச எல்லா சிபிக்களுக்கும் வாழ்க்கை சொர்க்கம்.. !
என் சைந்தவியும் பாப்புவும், பாப்புவோட ஸ்கூல் லீவுக்காக ஊருக்கு போயிருக்காங்க...பதினைஞ்சு நாள் என்ன தனியா விட்டுட்டு போயிருக்காங்க..யார்கிட்டயும் சிரிச்சு பேச புடிக்கல...கிரிக்கெட் மேட்ச் பார்க்க புடிக்கல...பாப்புவோட வெளாட்னும்போல இருக்கு...எப்ப பார்த்தாலும் லேப்டாப் நோண்டறத விட்டுட்டு நான் பேசறத கொஞ்ச நேரம் கேள்றா எருமைன்னு சைந்தவிகிட்ட திட்டு வாங்கணும் போல இருக்கு..தண்ணியடிக்கரத தவிர வேற எதுவுமே புடிக்கமாட்டேங்குது..(ச்சே கடைசி வரில தக்காளி வெளியூர்க்காரன் உள்ள வந்துட்டான்..டேய் வெளில போடா டேய்...)
என் சைந்தவி ஊருக்கு போய் அஞ்சு நாளாகுது...அவள பார்க்கணும் போல இருக்கு..போன வாரம் ஏண்டி அந்த ப்ரேஸ்லெட்ட தொலைச்சன்னு அவள வம்புக்கு சண்டைக்கு இழுக்கணும் போல இருக்கு...ஏண்டி டிஸ்கவரி சேனல் பார்க்கரப்பல்லாம் எனக்கு உங்க அப்பா ஞாபகம் வருதுன்னு அப்பாவித்தனமா கேட்டு அவள கடுப்பேத்தனும் போல இருக்கு..நான் தூங்கரத அவ ரசிச்சு பார்க்கறத நான் தூங்காம இருந்து ரசிக்கணும் போல இருக்கு..அவ டிரஸ் பண்ணும்போது பக்கத்துலையே இருந்து அவ சிரிக்க சிரிக்க கமென்ட் அடிக்கணும் போல இருக்கு... இப்ப அவளும் என்ன கண்டிப்பா மிஸ் பண்ணுவாளா இருக்கும். !
என் சைந்தவிய நான் குழந்தைலேர்ந்து பார்த்து பார்த்து வளர்க்க முடியலயேங்கற வருத்தம் எனக்கு இருக்ககூடாதுங்கறதுக்குத்தான் என் சைந்தவியே வந்து எனக்கு மகளா பொறந்துருக்கா போல..அதே அழகு கண்ணு..கொழு கொழு கன்னம்..என் பாப்புவ பார்த்துகிட்டே இருக்கலாம் தெரியுமா...நான் இல்லாம ஊர்ல எவ்ளோ கஷ்டபட்றாலோ தெரில..அப்பாவ பார்க்கணும்.. என்னை என் அப்பா வீட்டுக்கு கூட்டிட்டு போங்கன்னு சைந்தவிக்கிட்ட அழுதுகிட்டே இருக்காலாம்.. அவ குட்டி பொண்ணு...அவங்கம்மாகிட்ட கேட்ருவா.. நான் யார்கிட்ட போய் கேப்பேன்..என் பாப்புவ பார்க்கணும்..என்னை கூட்டிட்டு போங்கன்னு.. !
மனசுக்கு புடிச்சவங்கள பிரியற பிரிவு ரொம்ப கொடுமை பாஸ்...அது பதினைஞ்சு வருசமா இருந்தாலும் சரி..பதினைஞ்சு நாளா இருந்தாலும் சரி.. !
ஒரு நிமிஷம் இருங்க சார்..நான் போய் பாப்புகிட்டையும் சைந்தவிகிட்டையும் ஒரு வார்த்தை பேசிட்டு வந்துடறேன்...என் தங்கபவுனு சாப்ட்டாலா என்னனு தெரில..பேசி அஞ்சு மணி நேரம் ஆச்சு... !
என் குரலை கேக்கலைனா என் பாப்பு சாப்ட மாட்டா...!
வெளியூர்க்காரன்
@சைந்தவி கெடைச்ச சிபிக்களுக்கு.//
நீங்களும் ஒரு தடவ உங்க சைந்தவிகிட்ட எதேச்சையா சொல்ற மாதிரி இன்னிக்கு ஒரு தடவ ஐ லவ் யு சொல்லிருங்க...எல்லா சைந்தவிங்களுக்கும் தான் புருஷன் தன்கிட்ட அடிக்கடி ஐ லவ் யு சொல்றது ரொம்ப புடிக்கும்...கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆய்ருந்தா கூட...!
@சைந்தவி கெடைக்காத சிபிக்களுக்கு.//
சனியனே..உனக்கெல்லாம் அட்வைஸ் ஒரு கேடா...போ போய் எந்த கருமத்தயாச்சும் குடிச்சுபுட்டு வீட்டுக்கு போய் அக்கா மேல கை படாம குப்புற படுத்து தூங்கிரு..ஏதும் சில்மிஷம் பண்ணி எழுப்பிகிலுப்பி விட்டு அடி வாங்கிறாத எழவு..!
வெளியூர்க்காரன்
ஆ...திரும்பவும் சைந்தவியா ...!! ஓக்கே..ஓக்கே..!!
கடைசி வரிகள் ஹா..ஹா.....!!
//எல்லா சைந்தவிங்களுக்கும் தான் புருஷன் தன்கிட்ட அடிக்கடி ஐ லவ் யு சொல்றது ரொம்ப புடிக்கும்...கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆய்ருந்தா கூட...! //
போன் போட்ட அடிங்...தொடப்ப கட்டை அப்படின்னு குரல் வருதே பாஸ் ஹி..ஹி..
@ஜெய்லானி said...
போன் போட்டா அடிங்...தொடப்ப கட்டை அப்படின்னு குரல் வருதே பாஸ்.//
@சைந்தவி கெடைக்காத சிபிக்களுக்கு.//
கடைசி நாலு வரி உனக்குத்தான் மச்சி...போய் சத்தமில்லாம தூங்கிரு..!:)
vaanga vaanga veliyooor; kalyaanam ellam mudinjathaaa?
machi neeenga paaatuku blogukku leavu vuttutu poiteeenga;
ungalyum unga sainthaviyayum naaanga romba miss pannunom
:-)
x-(
;-)
சைந்தவி கிடைக்காத சிபிக்களே...
ஒன்று சேருங்கள்.....புரட்சி ஓங்குக...வெல்க நமது வயித்தெரிச்சல்கள்!
@@vinu says:
machi neeenga paaatuku blogukku leavu vuttutu poiteeenga;///
லீவ் விடற அளவுக்கெல்லாம் வெளியூர்க்காரன் வொர்த் இல்ல வாத்யாரே...
எழுத மேட்டர் இல்ல...
அதான் எழுதல..! :)
@@@Rettaival's said...
சைந்தவி கிடைக்காத சிபிக்களே...
ஒன்று சேருங்கள்.....புரட்சி ஓங்குக...வெல்க நமது வயித்தெரிச்சல்கள்!///
பூரா பெரும் தண்ணியடிச்சிட்டு இந்நேரம் பிளாட் ஆய்ருப்பாணுக மச்சி...! :)
அட இங்க பாருடா... தூங்கிக்கிட்டு இருந்த வெளியூர்காரன் திடீர்னு முழிச்சு பதிவு போடுறான்....
மச்சி திரும்பவும் சைந்தவியை நினைவுபடுத்தி என்னை கல்யாணம் பண்ண வச்சிருவ போலையே!!!
எங்கய்யா போயிருந்த இவ்வளவு நாளா? தக்காளி எப்போ வர்றான்... எப்போ போறான்னு சொல்ல முடியலையே!!!
//எனக்கு பெருசா எதுவும் வேணாம்டா..நீ சாப்டும்போது உன் கைய்யால ஆசையா ஒரு வாய் எனக்கு ஊட்டிவி//
ஏன் ஹோட்டல்-லயே புல் மீல்ஸ் சாப்பிட்டுட்டு வந்துட்டியா??
//எப்ப பார்த்தாலும் லேப்டாப் நோண்டறத விட்டுட்டு நான் பேசறத கொஞ்ச நேரம் கேள்றா எருமைன்னு சைந்தவிகிட்ட திட்டு வாங்கணும் போல இருக்கு..///
அம்மாடி சைந்தவி இவனுக்கு இதுமாதிரி திட்டி திட்டி ஒரு சி.டி-ல ரெகார்ட் பண்ணி கொடுத்துட்டு போம்மா... பையன் ரொம்ப ஏங்குறான்... பாவம்..
//போன வாரம் ஏண்டி அந்த ப்ரேஸ்லெட்ட தொலைச்சன்னு அவள வம்புக்கு சண்டைக்கு இழுக்கணும் போல இருக்கு//
ஏன் சரக்கடிக்க காசு தேத்தமுடியலையா??
//ஏண்டி டிஸ்கவரி சேனல் பார்க்கரப்பல்லாம் எனக்கு உங்க அப்பா ஞாபகம் வருதுன்னு அப்பாவித்தனமா கேட்டு அவள கடுப்பேத்தனும் போல இருக்கு..//
ஏன் மச்சி முதலை கழுத்தை பாய்ஞ்சு புடிச்சு வாயை கயத்தைப்போட்டு கட்டி இழுத்துட்டுப் போறா மாதிரி உன்னையும் பண்ணிட்டாரா?
//நான் தூங்கரத அவ ரசிச்சு பார்க்கறத நான் தூங்காம இருந்து ரசிக்கணும் போல இருக்கு//
ஆக மொத்தம் ரெண்டும் தூங்குறமாதிரி ஐடியா இல்ல... அதை எப்புடி மச்சி எலக்கிய எழுத்தாளர் மாதிரி சொல்லுற??
//அப்பாவ பார்க்கணும்.. என்னை என் அப்பா வீட்டுக்கு கூட்டிட்டு போங்கன்னு சைந்தவிக்கிட்ட அழுதுகிட்டே இருக்காலாம்.. அவ குட்டி பொண்ணு...அவங்கம்மாகிட்ட கேட்ருவா.. நான் யார்கிட்ட போய் கேப்பேன்..என் பாப்புவ பார்க்கணும்..என்னை கூட்டிட்டு போங்கன்னு..!///
எனக்கும் பிளைட் டிக்கெட் எடுத்துக்கொடுத்தீனா நான் கூட்டிட்டுப் போறேன்.
.
.
.
தக்காளி அப்புடியாவது இந்த முக்காடு போட்ட உன் மூஞ்சியைப் பாத்துறலாம்னுதான்
//என் குரலை கேக்கலைனா என் பாப்பு சாப்ட மாட்டா...//
ஓ பூச்சாண்டி வாறான் ஒழுங்கா சாப்பிட்டிருன்னு சொல்லி பயமுறுத்தி சாப்பிட வைக்கிறது உன்னை சொல்லித்தானா!!!???
//.எல்லா சைந்தவிங்களுக்கும் தான் புருஷன் தன்கிட்ட அடிக்கடி ஐ லவ் யு சொல்றது ரொம்ப புடிக்கும்...கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆய்ருந்தா கூட...//
மச்சான் முந்தியெல்லாம் கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆகியிருந்தா "அடிக்கு அடி" (நீ சேர்த்து எழுதியிருந்தாலும் எங்களுக்குப் புரியும்டி) ஐ லவ் யு சொல்லுவானுக. இப்போவெல்லாம் கல்யாணம் ஆனா அன்னையிலிருந்தே அப்புடித்தான் நிலைமை.
//சனியனே..உனக்கெல்லாம் அட்வைஸ் ஒரு கேடா...போ போய் எந்த கருமத்தயாச்சும் குடிச்சுபுட்டு வீட்டுக்கு போய் அக்கா மேல கை படாம குப்புற படுத்து தூங்கிரு..ஏதும் சில்மிஷம் பண்ணி எழுப்பிகிலுப்பி விட்டு அடி வாங்கிறாத எழவு..! //
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகாததால இந்த பாயிண்டு எனக்கில்லை... செல்லாது...
// ஜெய்லானி said...
//எல்லா சைந்தவிங்களுக்கும் தான் புருஷன் தன்கிட்ட அடிக்கடி ஐ லவ் யு சொல்றது ரொம்ப புடிக்கும்...கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆய்ருந்தா கூட...! //
போன் போட்ட அடிங்...தொடப்ப கட்டை அப்படின்னு குரல் வருதே பாஸ் ஹி..ஹி..//
ஒய் உங்க வீட்டு அம்மணிக்கு பேசனும்... தப்பான நம்பருக்கு போன் பண்ணினா வேற என்ன கொஞ்சுவாங்களாக்கும்???
இனி நாங்க சைந்தவியை மிஸ் பண்ணாத மாதிரி பாத்துக்கோங்க...
// நான் தூங்கரத அவ ரசிச்சு பார்க்கறத நான் தூங்காம இருந்து ரசிக்கணும் போல இருக்கு.. //
பிரமாதம்...
எழுத்துரு அளவை கொஞ்சம் குறைச்சாதான் என்னவாம்... அப்புறம் பேச்சுவழக்கை எழுத்துல கொண்டு வர்றது ஓகே தான்... அது அங்கங்க எழுத்துப்பிழையா தெரியுதே...
முதல் ல வெளியூருக்கு வாழ்த்துக்கள் ..எதுக்குன்னு கேக்குறீங்கள .கல்யாணம் பண்ணினதுக்கு ..ஹி ..ஹி ..(யான பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் )
//ஜீன்ஸ் டி ஷர்ட் போட்டுக்கிட்டு பொண்ணுங்க என்னதான் மாடர்னா காமிச்சுகிட்டாலும் பொண்ணுங்க பொண்ணுங்கதான்னு.//
ஹி ..ஹி மக்கா தத்துவம் ..தத்துவம் ..தப்பி தவறி ..வீட்டுல இத காண்பிச்சு ராதே ...தக்காளி பூரி கட்டையால மண்டை பொளந்துற போகுது ..
சிபி வேற சி பி வேற.. இது தெரியாம ஓடி வந்தேன்.. ஹி ஹி
hello இங்க தைரியம் இருந்தா கமெண்ட் போடு சொல்றார் இம்சை அரசன் பாபு....உங்க ப்ளாக் பத்தி வெளியில் தவறான பிரச்சாரம் செய்றார் இம்சை அரசன்
யோவ்... வெளியூரு... second innings start ஆயிடுச்சா?!!!.
சீக்கிரமே பாப்பு குட்டி பொறக்க வாழ்த்துக்கள்...
[நோட்: therez no connection b/w first and second lines.both should read separately; ;)]
//ஏண்டி டிஸ்கவரி சேனல் பார்க்கரப்பல்லாம் எனக்கு உங்க அப்பா ஞாபகம் வருதுன்னு அப்பாவித்தனமா கேட்டு அவள கடுப்பேத்தனும் போல இருக்கு.//
பார்த்து மச்சி..
அவ இன்னும் அப்புராணித்தனமா,எப்புடி உங்கள பார்க்குறப்ப எல்லாம் எனக்கு டிஸ்கவரி சேனல் ஞாபகம் வர்ற மாதிரியானு எகத்தாளமா கேக்கப் போறா.
//போன் போட்ட அடிங்...தொடப்ப கட்டை அப்படின்னு குரல் வருதே பாஸ் ஹி..ஹி..//
யோவ்,வெளியூர்க்காரன் என்ன வெளிய சொல்லிகிட்டா இருக்கான்?நீ மட்டும் ஏன்யா பொதுவுல சொல்லி அசிங்கப்படுற? :)
@@@@ILLUMINATI says:
யோவ்,வெளியூர்க்காரன் என்ன வெளிய சொல்லிகிட்டா இருக்கான்?நீ மட்டும் ஏன்யா பொதுவுல சொல்லி அசிங்கப்படுற? :).//
எலேய்...ஏண்டா..?
@@@@taaru said...
யோவ்... வெளியூரு... second innings start ஆயிடுச்சா?!!! ////
ஆய்ருச்சு...ஆய்ருச்சு...!
(Second inningsa sonnenppaa...!) :)
@@@சௌந்தர் said...
hello இங்க தைரியம் இருந்தா கமெண்ட் போடு சொல்றார் இம்சை அரசன் பாபு....உங்க ப்ளாக் பத்தி வெளியில் தவறான பிரச்சாரம் செய்றார் இம்சை அரசன்.///
நீ விடு மச்சி அந்த பயல ஒருநாள் போட்ருவோம்..!
ஆமாம், நீ என் ரெண்டாம் கிளாஸ் புள்ளைங்க மாதிரி வந்து கம்ப்ளைன்ட் பண்ணிகிற்றுக்க...?
எத்தானாம்பு படிக்கற நீ...?
(ஏண்டா எவ்ளோ தைரியம் இருந்தா இங்க வந்து கமென்ட் போடுவ நீ..? )
:)
@@சி.பி.செந்தில்குமார் said...
சிபி வேற சி பி வேற.. இது தெரியாம ஓடி வந்தேன்.. ஹி ஹி .///
ஹி ஹி..ஹி ஹி...ஹி ஹி...ஹி ஹி..! :)
கல்யாணம் முடிஞ்சு வந்தாச்சா அண்ணா ? வாங்க வாங்க
//என் சைந்தவிய நான் குழந்தைலேர்ந்து பார்த்து பார்த்து வளர்க்க முடியலயேங்கற வருத்தம் எனக்கு இருக்ககூடாதுங்கறதுக்குத்தான் என் சைந்தவியே வந்து எனக்கு மகளா பொறந்துருக்கா போல//
அண்ணா கவிதை மாதிரி இருக்கு .. வந்ததும் இப்படி ஒரு பதிவு போட்டு மறுபடியும் பீல் பண்ண வச்சிட்டீங்க ..
//போ போய் எந்த கருமத்தயாச்சும் குடிச்சுபுட்டு வீட்டுக்கு போய் அக்கா மேல கை படாம குப்புற படுத்து தூங்கிரு//
நான் தண்ணி அடிக்க மாட்டேனாக்கும் .. ஹி ஹி
@@@இம்சைஅரசன் பாபு.. said...
ஹி ..ஹி மக்கா தத்துவம் ..///
பேருக்கேத்த மாதிரியே இருக்கியேடா என் செல்லம்..படிச்சா சிரிப்பு வர்ற மாதிரி நீ முன்னூறு கமெண்ட் போடு..ஒரு பிரச்சனையும் இல்ல....ஆனா, தக்காளி மொக்கையா ஒரு பதிவுல ரெண்டு கமெண்டுக்கு மேல இனிமே பார்த்தேன்...! ங்கொய்யால உன் வாய்ல இருக்கற அருவாள புடுங்கி கழுத்துல பார்க் பண்ணிருவேன்......!
:)
//லீவ் விடற அளவுக்கெல்லாம் வெளியூர்க்காரன் வொர்த் இல்ல வாத்யாரே...
எழுத மேட்டர் இல்ல...
அதான் எழுதல..! :)
//
ஹி ஹி .. அப்படி சொன்னா நாங்க நம்பனுமா ?
ஐ அண்ணன் இங்கதான் இருக்காரு .. இன்னிக்கு கொஞ்ச நேரம் வெள்ளாடலாம் .. எத்தன நாள் ஆச்சு ..
@@@கோமாளி செல்வா said.///
எலேய் பேஸ்புக்ல வெரட்டி வெரட்டி மொக்கை போடுவியே அவன்தானடா நீ...உன்னயதாண்டா நான் தேடிகிட்ருக்கேன் என் செல்லமே...! :)
@@@Philosophy Prabhakaran said...
பிரமாதம்...////
இங்க வந்து இப்டியெல்லாம் சொல்றது தப்பாச்சே...! தம்பி இந்த ஏரியாவுக்கு புதுசா...? :)
@@@ரோஸ்விக் said...//
காவாலி பயலே..உனக்கு இருக்குடி ஒருநாளைக்கு..! :)
//எலேய் பேஸ்புக்ல வெரட்டி வெரட்டி மொக்கை போடுவியே அவன்தானடா நீ...உன்னயதாண்டா நான் தேடிகிட்ருக்கேன் என் செல்லமே...! :)
//
அதனாலதான் பேஸ்புக் இனிமேல் க்ளோஸ் பண்ணப் போறதா சொல்லிட்டு இருக்காங்க. என்னைய எதுக்குத் தேடுறீங்க ? எதாச்சும் பரிசு தரப்போறீங்களா ?
அப்புறம் நான் யாரையும் வெரட்டி வெரட்டி மொக்கை போடுறது இல்லை.. ஹி ஹி .. அத படிச்சிட்டு அவுங்கதான் மிரண்டு போயிடறாங்க ..
@@@கோமாளி செல்வா says:
அப்புறம் நான் யாரையும் வெரட்டி வெரட்டி மொக்கை போடுறது இல்லை..//
ராஜா...இங்க அலையறவனுக எல்லாருமே கொஞ்சம் லூசு...திடீர்னு டென்சன் ஆகி என்ன பண்றோம்னு தெரியாம எங்களையே நாங்க வேட்டிக்குவோம்..நீ வெளாட்டு புள்ளயா வேற தெரியுறா..பேஸ்புக்ல மொக்கை போடற மாதிரி இங்க போட்டு எங்கள வெறுப்பேத்தி விட்றாத..! டென்சன் ஆகி அப்றம் நாங்க கூட்டமா சேர்ந்து சூசைட் பண்ணிக்குவோம்.(உன் மொக்கையோட வாழறதுக்கு வக்காளி சாவலாம்டா..)..
பார்த்து இருந்துக்க... அவ்ளோதான் சொல்லுவேன்...! :)
// டென்சன் ஆகி அப்றம் நாங்க கூட்டமா சேர்ந்து சூசைட் பண்ணிக்குவோம்.(உன் மொக்கையோட வாழறதுக்கு வக்காளி சாவலாம்டா..)..
பார்த்து இருந்துக்க... அவ்ளோதான் சொல்லுவேன்...! :)
//
உஸ் .. இதுக்கு இவ்ளோ பெரிய கமெண்ட் போடுறதா ? ஐயோ எனக்குப் பயந்து பயந்து வருதே .. அண்ணனுக்கு கோபம் வந்திடும் போலேயே .. என்ன பண்ணட்டும் அப்படியே ஓடிப் போய்டட்டுமா ?
ஒரு சத்ததோயும் காணோம் . உண்மைலேயே சொன்ன மாதிரியே எல்லோரும் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க போல .. எவ்ளோ நேரம்தான் ஆள் இல்லாத வீட்டுல இருக்குறது ..!!
டண்டனக்கா ஏ டனக்கு நக்கா.........
///////Veliyoorkaran said...
@@@Philosophy Prabhakaran said...
பிரமாதம்...////
இங்க வந்து இப்டியெல்லாம் சொல்றது தப்பாச்சே...! தம்பி இந்த ஏரியாவுக்கு புதுசா...? :)///////
தம்பிய விட்ருங்க நம்ம பயதான்....
simply awesome :)
me 50thuuuuuuuuuuuuuuuu