- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 84 comments and to comment


“நாளைக்கு காலைல பத்து மணிகெல்லாம் அவங்க வந்துருவாங்க..இன்னிக்கே வெங்கட்டு ஐயர் கடைலேர்ந்து ஸ்வீட் காரம்லாம் மறந்துறாம வாங்கிட்டு வந்துருங்க..மொதோ மொதொள்ள நம்ப சைந்தவிய பொண்ணு பார்க்க வர்றாங்க..இந்த எடமே எப்டியாச்சும் தெகைஞ்சிரனும்..”..ஏதேதோ வேண்டிகிட்டே அங்கயும் இங்கயும் பதட்டமா அலைஞ்சுகிட்ருந்த  என் அம்மாவ பார்த்தப்போ எனக்கு அவ முதுக புடிச்சு தொங்கி திட்டு வாங்கணும் போல இருந்துச்சு...நான் இன்னொருத்தனுக்கு கல்யாணம் பண்ணி குடுக்கற அளவுக்கு எப்போ வளந்தேன்..இப்பயுமே என் அப்பா முறைச்சு பார்த்தா எனக்கு அழுக வருமே...!

சிபியோட போட்டோவ இருபத்தி எட்டாவது தடவையா யாருக்கும் தெரியாம எடுத்து பார்த்தேன்..இருபத்தி எட்டாவது தடவையா நல்லாருந்தான்..ஸ்டுடியோல போய் கோட் போட்டு புல் மேக்அப்ள போட்டோ எடுத்து அனுப்பாம எதோ பங்சன்ல  எடுத்தத அனுப்பிருந்தாங்க.ரொம்ப மேன்லியா இருந்தான்.எனக்கு உடனே அவன நேர்ல பார்க்கணும் போல இருந்துச்சு..மனசு வெக்கபட்டுகிட்டே என்கிட்டே கேட்டுச்சு..இவன லவ் பண்ண ஆரம்பிக்கவான்னு..நான் தலைல அடிச்சுக்கிட்டே ச்சே ச்சே அதெல்லாம் நடந்தா பார்த்துக்கலாம்னு போட்டோவ திரும்ப உள்ள வெச்சுட்டு திரும்புனப்போ எங்கம்மா சிரிச்சுகிட்டே என்கிட்டே கேட்டா..”என்னடி மாப்ளைய ரொம்ப புடிச்சிருக்கா”ன்னு .. அய்யோ..!

காலைல நாலு மணிகெல்லாம் அம்மா எந்திரிச்சு வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டா..எனக்குதான் தூக்கமே வரல...”மாப்ள ரொம்ப இயல்பா  இருப்பாப்லாயாம் ..அதனால ரொம்ப மேக்அப்ளாம் வேண்டாம். சிம்பிளா  பண்ணிக்க போதும்”னு அம்மா வந்து சொல்லிட்டு போனா..வெளில என் மாமா எங்கப்பாகிட்ட சொல்லிகிட்ருந்தாறு “மாப்ள ரொம்ப ஜாலியான டைப்பாம் அத்தான் ..சிரிக்க சிரிக்க பேசுவாப்லயாம்..அவரு பிரெண்ட்ஸ் வட்டாரத்துல விசாரிச்சப்ப சொன்னாங்க..அவங்க குடும்பத்துல எல்லாரும் ரொம்ப நல்ல மாதிரியாம்...நம்ப சைந்தவி ரொம்ப குடுத்து வெச்சவ....!”

என்னங்கடா இது ஆளாளுக்கு பேசி இவங்களே கல்யாணத்த  முடிச்சிருவாங்க போல..இன்னும் அரை மணி நேரத்துல மாப்ள வீட்லேர்ந்து  வந்துருவாங்க. ப்ளூ கலர் பட்டுபுடவைல மேக்அப்ளாம் போட்டுட்டு உக்காந்துருந்தேன்..சிபி போட்டோவ பார்க்கணும் போல இருந்துச்சு..ச்சே வேணாம்..அதான் நேர்ல பார்க்கபோரனே ..பேனாவ எடுத்து நெகத்துக்கு கீழ குட்டியா "சிபி" ன்னு எழுதி பார்த்தேன்...சிரிப்பு வந்துச்சு..கொஞ்சம் வெக்கமும்..   என்னையே அறியாம என் விரலுக்கு முத்தம் குடுத்தேன்..குடுத்துட்டு ச்சீ அலையாதடி சைந்தவின்னு  நாக்க கடிச்சுகிட்டேன்...நான் காபி குடுத்தப்ப என் வெரல் நுனில உன் பேர எழுதிருந்தனே பார்த்தியாடான்னு கேக்கணும்..கல்யாணத்துக்கு அப்பறம்..! ச்சே அவங்க இன்னும் வரவே இல்ல அதுக்குள்ள என்னென்னமோ இமேஜின் பண்றேன் ..

கார் வந்துடுச்சு யாராரு வந்துருக்காங்கன்னு ரூம்லேர்ந்து பார்க்க முடியல...நாலஞ்சு பேரு வந்துருப்பாங்களா இருக்கும்...வாங்க வாங்கன்னு எங்கப்பா எல்லாரையும் வழிஞ்சு வழிஞ்சு கூப்டுகிட்ருந்தாறு ..எங்கம்மாவ திட்டும்போது எங்கப்பா குரல் எப்டி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன்..தான் பொண்ணோட வாழ்க்கைனா எப்டியெல்லாம் மாறிடறாங்க ஆம்பளைங்க...!

எங்கப்பா எல்லாரையும் உக்காருங்கன்னு சொல்லிகிட்ருந்தப்ப திடீர்னு  ஒரு குரல்.."சும்மா வெக்கபடாம  நீங்களும் வந்து உக்காருங்க மாமா...நமக்குள்ள என்னன்னு."  எது யாரோட குரலா ..இந்த நாய்தான்..எங்க வீட்ல வந்து உக்காந்துகிட்டு எங்கப்பாவையே வெக்கபடாம உக்காருங்கன்னு சொல்லிகிட்ருந்தான் எருமை ...எங்கப்பா அப்போ சிரிக்க ஆரம்பிச்சாரு...ஒரு அரை மணி நேரம் எல்லாரும் என்னை மறந்துட்டாங்க ..பேசிகிட்டே இருந்தான்..என் மாமாவுக்கு அவன் பேசுன பேச்சுல சிரிச்சு சிரிச்சு அவர் கண்ணுலேர்ந்து தண்ணி வந்துருச்சு..போதும் மாப்ள விட்ருங்கன்னு அவன்கிட்ட கெஞ்ச ஆரம்பிச்சிட்டாரு...அய்யோ என்ன கூப்டுங்கடா நான் வந்து என் புருசன பார்க்கனும்னு கத்தனும் போல இருந்துச்சு...கூப்ட்டாங்க.. 

“மாப்பிள்ளைய பார்த்து வணக்கம் சொல்லுமா”ன்னு ஒரு சவுண்ட்.

எங்கப்பா..!

நிமிந்து பார்த்தேன்..

ப்ளூ கலர் செக்டு ஷர்ட், ப்ளாக் கலர் ஜீன்ஸ் போட்டுகிட்டு சோபால உக்காந்துருந்தான் என் சிபி...ரொம்ப சுப்பர்லாம் இல்ல...பட்,நல்லா இருந்தான் ...மறுபடியும் ஒரு தடவ நிமிர்ந்து பார்க்க வெக்கற அளவுக்கு...!

காபி குடுத்தேன்...படு டீசெண்டா வாங்கிகிட்டான்..அழகா சிரிச்சுகிட்டே ஜெண்டிலா தேங்க்ஸ் சொன்னான்..வேற எதாச்சும் பேசுவான்னு நெனச்சேன்..ஒண்ணுமே சொல்லல.. !

எனக்கு உடனே மனசுக்கு தோனுச்சு..இவதான் என் புருசன்னு.. இவன்கூட இப்போவே கெளம்பி போய்டலாம்னு... நானும் என் புருசனும் இருக்கப்போ எதுக்கு இவ்ளோ பேரு தேவை இல்லாம இங்க இருக்காங்கன்னு நெனைச்சுகிட்டே என் அப்பாவ பார்த்தேன்..என் அப்பா எனக்கு சொந்தகாரர் மாதிரியே தெரிய ஆரம்பிச்சாரு...!

டேய் தம்பி போய் சைந்தவி கூட ஒரு வார்த்தை பேசிட்டு வந்துடு..என் மாமா சொன்னது என் காதுல விழுந்துச்சு..அயோயோ ..எல்லார்கிட்டயும் இவ்ளோ நல்லா பேசுறானே..நம்மகிட்ட எப்டி பேசுவான்...சாமி நான் உளறி கொட்டாம இருக்கணும்னு நெனைச்சுகிட்டே ரெண்டு பெரும் பின்னாடி  தோட்டத்துக்கு போனோம்...

ஆனா, அங்க உளறி கொட்னது..!

...ச்சாக்லேட் பக்கங்கள் தொடரும்.,  

வெளியூர்க்காரன் 

84 Responses so far.

  1. யோவ் வெளியூரு ,
    நீ என்னை என்ன வேணும்னாலும் திட்டிகோ ,இல்ல என்னை இழுத்து போட்டு ஓட ஓட வெட்டு ...,உன்னக்கு full permission தரேன் ...இந்தபதிவை பார்த்ததும் ..ஜொள்ளு வருதுயா ...,அருமையா அருமை.....,

    //////என் அப்பா எனக்கு சொந்தகாரர் மாதிரியே தெரிய ஆரம்பிச்சாரு...! //////

    இங்க விழுந்தேன் ,,போய்யா போ ...உன்னால என்னக்கு ஒரு அஞ்சு ரூபா செலவு ..ஒரு KINGS SIZE அடிக்க போறேன் ...,அவளோட நினைவுகலோடயா

  2. vinu says:

    intha varam oottukku pona ammakkitta sollanum namakum ponnu paaaka solli


    ippadi pogaiya vra vaikuraanungaleaaaaaaaaaaaaaaa







    daaaiiiiiiiiiiiiiii

    ungli ellaaaaaaaaaam enna panna


    sollu ippa naan enna pannaaaaa[thambi maathavan stylil padikkavaum]

  3. ஒவ்வொரு வரிகளும் கண்களில் நீர் நிரப்புகிறது
    பற்பல நினைவுகளால் சுய நினைவு இழக்கிறேன்
    தொடருங்கள்......

  4. ஐயோ ....என்னக்கு வேலையே ஒடலையே !!!!! மெயில் லா வருது ஒன்னுமே புரியலயே ,தேவை இல்லாமல் வேண்டதவகர்களுக்கு எல்லாம் cc அனுப்பி பல்பு வாங்குகிறேன் ...கொல்றீயடே வெளியூரு.......,

  5. Unknown says:

    Really nice. Went back to 7 years in memories. Good and keep going.

  6. @@@@பனங்காட்டு நரி said...
    உன்னால என்னக்கு ஒரு அஞ்சு ரூபா செலவு ..ஒரு KINGS SIZE அடிக்க போறேன் ..////

    என்ன மச்சான் சொல்ற..கிங்க்ஸ் வெலை ஏத்திட்டானுகள...நான் அங்க இருந்தப்ப நாலு ரூவாதாண்டா...! :)

  7. @@@@@@ vinu said...
    daaaiiiiiiiiiiiiiii
    ungli ellaaaaaaaaaam enna panna
    sollu ippa naan enna pannaaaaa[thambi maathavan stylil padikkavaum]////

    நேரா போய் ஒரு கட்டிங் அடிச்சுட்டு குப்புற படு மச்சி எல்லாம சரியாய்டும்...! பத்தலைனா ஒரு டகீலா ஷாட் போட்டுக்கோ...! அப்பயும் பத்தலைனா ஒரு வாழபழத்துல எலி மருந்த வெச்சி தின்னுட்டு மல்லாக்க படுத்துரு..!

    (தக்காளி யாருகிட்ட வந்து ஐடியா கேக்குது பாரு இது...) :)

  8. Veliyooru,

    Story romba nalla iruku.... Waiting for the continuation.

  9. @@@கடல்புறா said...
    ஒவ்வொரு வரிகளும் கண்களில் நீர் நிரப்புகிறது
    பற்பல நினைவுகளால் சுய நினைவு இழக்கிறேன்......////

    அடடா பங்காளி பீல் ஆயட்டாப்ள...ஏய் யாருப்பா அது ..தம்பிக்கு ஒரு கோலி சோடா குடுங்கப்பா...! காச தம்பிகிட்டையே வாங்கிக்க....! :)

  10. @@@@@Ananth said...
    Really nice. Went back to 7 years in memories. Good and keep going.///
    ////////////////////////
    மதுரை பாண்டி said...
    Veliyooru,Story romba nalla iruku.... Waiting for the continuation.////

    யோவ் பட்டாப்பட்டி...இந்த மாதிரி டீசென்ட்டா கமெண்ட் போட்ரவங்கேளுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலையேயா...! இதுக்கு எதுனா பரிகாரம் இருக்கா...? ( ஆமாம், எப்பையா ஊர்லேர்ந்து வருவ நீ...?..) :)

  11. taaru says:

    கொஞ்ச நாள்லயே வெளியூற புல்லா படிச்சுட்டேன்.[தேங்க்ஸ் டு அவிங்க ராசா];
    எனக்கு ஒரே ஒரு டவுட்; மற்ற கமெண்ட், போஸ்ட் எல்லாம் போட்டுட்டு, சைந்தவி பக்கங்கள்னு வந்த ஒடனே,வெளியூரு ரொம்ப பக்கத்துல உள்ளூரு மாதிரி ஆயிடுறியே எப்டியா?

    ஆனா ஒன்னு மட்டும் சொல்லிகிறேன்.. இப்டி எல்லாம் நிறையா நினச்சுட்டு இருந்தா எதுமே நடக்காதாம்.. எங்கூர்ல ஒரு குறிசொல்லி சொன்னாப்புல...

  12. சகா அருமை:)) அடுத்து எப்ப?

  13. @@@taaru said...
    சைந்தவி பக்கங்கள்னு வந்த ஒடனே,வெளியூரு ரொம்ப பக்கத்துல உள்ளூரு மாதிரி ஆயிடுறியே எப்டியா?///

    தக்காளி இந்த வார்தைக்குன்னே இன்னிக்கு இங்க கும்மியடிகறேன்யா...! :)


    ஆனா ஒன்னு மட்டும் சொல்லிகிறேன்.. இப்டி எல்லாம் நிறையா நினச்சுட்டு இருந்தா எதுமே நடக்காதாம்.. எங்கூர்ல ஒரு குறிசொல்லி சொன்னாப்புல...! //


    அந்த குறிசொல்லிய கூட்டிட்டு வந்து இந்த கதைய படிக்க சொல்லு மச்சி...! படிச்சு முடிச்சிட்டு நடக்குன்னு சொல்லிட்டு போவான்..!

    அழகான கற்பனைகள்தான மச்சி வாழ்க்கை..! இது நான் எழுதுனதுங்கரதுக்காக சொல்லல..யாரு எழுதிருந்தாலும் சொல்லிருப்பேன்..கொஞ்ச நாள் அழகா ரசிச்சுதான் வாழ்ந்து பார்ப்போமே...!
    :)

  14. @@@Ponkarthik said...
    சகா அருமை:)) அடுத்து எப்ப?///

    அடுத்த பதிவ போஸ்ட் பண்ணொன்ன...! :)

  15. Yes Veliyooru ,

    Gold Flake Filter Kings - 5.00

    Filter Gold Flake - 3.50 + Halls if you paid 5.00 rupees

    Charms - 2.00

  16. taaru says:

    //.யாரு எழுதிருந்தாலும் சொல்லிருப்பேன்..கொஞ்ச நாள் அழகா ரசிச்சுதான் வாழ்ந்து பார்ப்போமே...!
    :)//
    I think Veliyooru getting into the mood..... வாங்க எல்லாரும் வெளியூரு பக்கம் வாங்க... வந்து கலக்குங்க....

  17. Jey says:

    //ஆனா, அங்க உளறி கொட்னது..! //

    காலங்காலமா ஆரம்பத்துல உளரிக் கொட்டிட்டு...காலம் முழுக்க முழிக்கிரது...இந்த நோனை பசங்கதான்...அத அடுத்த பதிவுல தெரிஞ்சிக்கனுமா?.

    டேய் வெளியூரு...கமென்ஸ டெலிட் பண்ணுனே... கொன்னே போட்ருவேன்... ராஸ்கல்..

  18. taaru says:

    //இன்னிக்கு இங்க கும்மியடிகறேன்யா...! :)///
    எங்க கும்மி அடிக்குறது?
    //அழகான கற்பனைகள்தான மச்சி வாழ்க்கை..! இது நான் எழுதுனதுங்கரதுக்காக சொல்லல..//
    இப்பூடி நாக்கு இருக்குன்றதுக்காக வளச்சு வளச்சு நக்குனா? போதும் ராசா... இத்தோட நிறுத்திக்குவோம்... [பி.கு:எங்க மத்த பக்கிகள காணோம்?]

  19. taaru says:

    உண்மைய சொல்லனும்னா... நீ ஒரு ...[அந்த ஆளு பேரு கூட ஏதோ சொல்வாய்ங்களே.. ....... ............ ]ஹம்... ஆமா.. வாத்ஸ்யாயனார்.....?!! அட ச்சே.. அவரு இல்லையா... திருடனா இருந்து அப்புறம் ஏதோ பெரிய காவியம் எல்லாம் எழுதினானே அந்த ஆளு? வெளியூரு , அது யாருன்னு கொஞ்சம் சொல்ல கூடாதா??? இங்க கஷ்டபடுறேன்ல..... help pleassse.....

  20. @@@பனங்காட்டு நரி said...
    Yes Veliyooru ,
    Gold Flake Filter Kings - 5.00
    Filter Gold Flake - 3.50 + Halls if you paid 5.00 rupees
    Charms - 2.00////

    அட வக்காளி..எல்லா ரேட்டையும் ஏத்திபுட்டாங்கேலா...! அப்பையே அடிச்சுகிட்டேன்.. விஜயகாந்துக்கு வோட்டு போடுங்கடான்னு.எவனும் கேக்கல .இப்ப அனுபவிங்க...! ஆமாம், ஒரு கிங்க்ஸ் அடிச்சா நான் உடனே மோர் பாக்கெட் குடிப்பனே..மோர் பாக்கெட் எவ்ளோ மச்சி இப்போ...! :)

  21. @@@@Jey said...
    டேய் வெளியூரு...கமென்ஸ டெலிட் பண்ணுனே... கொன்னே போட்ருவேன்... ராஸ்கல்..///

    எவ்ளோ முடியுமோ அவ்ளோ கும்மியடி மச்சி...உன் கமேண்ட டச்ச் பண்ணா இன்னிக்கு மொதோ டேட் பாடி நான்தான்..! :)

  22. @@@@ taaru said...
    திருடனா இருந்து அப்புறம் ஏதோ பெரிய காவியம் எல்லாம் எழுதினானே அந்த ஆளு? வெளியூரு , அது யாருன்னு கொஞ்சம் சொல்ல கூடாதா??? இங்க கஷ்டபடுறேன்ல..... help pleassse...../////


    திருடனா இருந்த அதுக்கப்றம் மனம்திருந்தி மிகபெரிய காவியங்கள படிச்சது நம்ம "பட்டாபட்டியார்" மட்டும்தான்..நீ அவர சொல்றியா...! அதுவும் அந்த எச்ச, பேனா, கமேர்கட்டு எழந்த உருண்டை இந்த மாதிரி சின்ன ஐட்டமாதான திருடும்...! நீ பில்ட் அப் குடுக்கற அளவுக்கு வொர்த் இல்லையே அது...! :)

  23. "திருடனா இருந்த அதுக்கப்றம் மனம்திருந்தி மிகபெரிய காவியங்கள படிச்சது நம்ம "பட்டாபட்டியார்" மட்டும்தான்.."

    ************************************எலேய் ...அவரு பொள்ளாச்சில பலூன் வித்துட்டு இருக்கார்லே...அந்த பெரிய மனுசனைப் போயி கலாய்க்கிறீகளே...நல்லாருப்பீகளாடா நீங்க?

  24. taaru says:

    ஆகா.. அதே தான்.... மன்னிச்சிடு பட்-பட்டி... அவரே தான்.... அவர மாதிரி நீ ஒரு மேதையா [ச்சி...கருமாந்திரம் .... எச்சி...]!! நீ இங்க இருக்குரவய்ங்க மனச திருடிட்டே... நல்லா இரு...

  25. taaru says:

    //சிபியோட போட்டோவ இருபத்தி எட்டாவது தடவையா யாருக்கும் தெரியாம எடுத்து பார்த்தேன்.//
    இந்த இடத்துல அந்த பொண்ணோட அத பாத்தேன்...

    //ரொம்ப மேன்லியா இருந்தான்.//
    இந்த இடத்துல அந்த பொண்ணோட இத பாத்தேன்...

    //மாப்ள ரொம்ப ஜாலியான டைப்பாம் அத்தான் ..சிரிக்க சிரிக்க பேசுவாப்லயாம்..அவரு பிரெண்ட்ஸ் வட்டாரத்துல விசாரிச்சப்ப சொன்னாங்க//
    இந்த இடத்துல அந்த மாமாவோட எதையோ பாத்தேன்...

    பி.கு: இப்டி எல்லாம் வரி வரியா அடிச்சு கமெண்ட் போட்டா தான்... இவிங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியும்... இல்ல அவ்ளோ தான்.. அடிச்சு சூப் வச்சுருவாய்ங்க...

  26. டாரு சார்! நீங்க சைவமா அசைவமா?

    (மச்சி...வலையை அந்தப் பக்கமா புடி!)

  27. taaru says:

    come ON....வெளியூரு... வாங்க கொஞ்சம் கும்மலாம்...
    [பி.கு: உங்க [ஏதோ மாதிரி இருக்கு... "உன்" அப்டின்னே சொல்லவா?] அரசவைல நடந்த GD எல்லாம் நல்லா பழக்கம்ன்றதால; கொஞ்சம் advantage எடுத்துகிட்டேன்... லாம்ல???]

  28. taaru says:

    சுத்த அசைவம் .... வால்/ கழுத்து அறுத்து ரத்தம் குடிக்க ரொம்ப பிடிக்கும்...

  29. @@@Rettaival's said...
    எலேய் ...அவரு பொள்ளாச்சில பலூன் வித்துட்டு இருக்கார்லே...அந்த பெரிய மனுசனைப் போயி கலாய்க்கிறீகளே...நல்லாருப்பீகளாடா நீங்க?..///

    எலேய் சும்மா கலாய்க்காதடா..!
    பலூன் விக்கற அளவுக்கெல்லாம் தியாகி பட்டாப்பட்டி அவர்களுக்கு திறமை பத்தாது...பச்சை புள்ளையே ஏமாத்திட்டு போயிரும்..! வேணா பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட்ல ககூஸ்ல காசு வாங்கி போடற வேலை பார்க்கலாம்..! (அப்ப கூட ரெண்டுக்கு போயிட்டு வந்து ஒன்னுக்குனு சொல்லி ஏமாத்திட்டு போயிருவானுக...! ) :)

  30. @@Rettaival's said...
    டாரு சார்! நீங்க சைவமா அசைவமா?
    (மச்சி...வலையை அந்தப் பக்கமா புடி!)//

    டேய் ரெட்டை..உன் பக்கத்துக்கு வீட்டு பிகரு மனுஷன் கிட்னிய கைல வெச்சு வெளாண்டதுல்லைன்னு ரொம்ப வருதபட்டுச்சுன்னு சொன்னேல்ல...! கிட்னிக்கு அடிபடாம புடி..! கண்ட எடத்துல அடிபட்டு உயிர் போனா பிரச்சனை இல்ல...! :)

  31. taaru says:

    ///@@@ வெளியூரு said
    (அப்ப கூட ரெண்டுக்கு போயிட்டு வந்து ஒன்னுக்குனு //
    போனண்ணே... ஆனா போகலண்ணே.... :) :)

  32. @@@@ taaru said...
    இந்த இடத்துல அந்த பொண்ணோட அத பாத்தேன்.../இந்த இடத்துல அந்த பொண்ணோட இத பாத்தேன்...///
    //இந்த இடத்துல அந்த மாமாவோட எதையோ பாத்தேன்...///
    பி.கு: இப்டி எல்லாம் வரி வரியா அடிச்சு கமெண்ட் போட்டா தான்... இவிங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியும்... இல்ல அவ்ளோ தான்.. அடிச்சு சூப் வச்சுருவாய்ங்க...////

    Haa.Haa..Good one dude..! I really enjoyed it..! :)

  33. @@@taaru said...
    சுத்த அசைவம் .... வால்/ கழுத்து அறுத்து ரத்தம் குடிக்க ரொம்ப பிடிக்கும்...//

    அட கழுத சொல்லவே இல்ல..!எங்க அப்டியே கழுத்த நெட்டுகுத்தா வெச்சு கவுந்து படு பார்ப்போம்..!
    (டேய் ரெட்டை நான் அறுக்கறேன் நீ குடிச்சிட்டு உப்பு கரெக்டா இருக்கான்னு சொல்லு...!) :)

  34. taaru says:

    Veliyoorkaran said...
    //கிட்னிக்கு அடிபடாம புடி..//

    மச்சீஸ்.... செம கிழி..... :) :)
    கழுதை களவாணிப் பயலுகள பத்தி கேள்வி பாட்டு இருக்கேன்... இவிங்க கிட்னி திருடய்ங்க போல...!! டேய்!! அய்யனாரு.. உருவிட்டு விட்ருவாய்ங்க.....ஜாக்ரதை...

  35. பட்டாபட்டி மாதிரி ஒரு வியாபார காந்தத்தைப் பாக்கவே முடியாதுடே... அவன் சிவாஜி ரஜினி மாதிரி. ஒரு ரூபா குடுத்தன்னு வச்சிக்க..அதை வச்சி....(எழுதுற எனக்கே இவ்வளோ கஷ்டமா இருக்கே...வாசிக்கிற உங்களுக்கு எவ்வளோ கஷ்டமா இருக்கும்!)

  36. டாரு கண்ணு...குப்புற படுத்து வலது கையை மடக்கி இடது கைய தூக்கி கால் ரெண்டையும் குத்தவச்சி அண்ணாந்து பாரு...என்னா தெரியுது...கிழிஞ்சு போன பட்டாபட்டி ஒண்ணு அந்தரத்துல தொங்குதா....அதே தான் மா...கிட்டக்க போய் மோந்து பாரு...( தக்காளி...கொலைக்கு ஏதுடா சைவம் அசைவம்....பட்டாபட்டி ஒருத்தன் போதும்டா...)

  37. taaru says:

    ஐயோ.. யாராவது காப்பாத்துங்கய்யா?
    ஊருக்குள்ள ஒரு பய இல்லையா? நான் ஒத்தையில கிடக்கனே...
    யோவ்.. வியாபாரி [அதனப்பா.. பலூன், கக்கூஸ்... புகழ்] நீங்களாவது வந்து காப்பாத்த கூடாதா?
    விட்டா கொத்துகறி போட்டுரூவாய்ங்க.. ..

  38. @@@taaru said...
    மச்சீஸ்.... செம கிழி..... :) :)
    கழுதை களவாணிப் பயலுகள பத்தி கேள்வி பாட்டு இருக்கேன்... இவிங்க கிட்னி திருடய்ங்க போல...!! டேய்!! அய்யனாரு.. உருவிட்டு விட்ருவாய்ங்க.....ஜாக்ரதை...///

    எலேய் அறுத்துகிற்றுக்கும்போது குறுக்க குறுக்க பேசாதரா அயோக்ய ராஸ்கல்...எனக்கு வேற கிட்னி எங்க இருக்குன்னு சரியா தெரியாது..மாத்தி கீத்தி அறுத்துபுட்டா அந்த பிகர் மனசு எவ்ளோ கஷ்டப்படும்...! கொஞ்ச நேரம் பேசாம படு..! :)

  39. @@@ Rettaival's said...
    பட்டாபட்டி சிவாஜி ரஜினி மாதிரி. ஒரு ரூபா குடுத்தன்னு வச்சிக்க..அதை வச்சி....(எழுதுற எனக்கே இவ்வளோ கஷ்டமா இருக்கே...வாசிக்கிற உங்களுக்கு எவ்வளோ கஷ்டமா இருக்கும்!)///

    ஹா ஹா ..டேய் முடியலடா சாமி...! :)

  40. taaru says:

    ச்சை.. ச்சி ச்சீ... பட்டபட்டி வச்சு தான் இவ்ளோ நாளா நாறுதா..? இது தெரியாம?!!!

    ஆமா மச்சி... நீங்க எப்டிடா அந்த கிளிஞ்சத வச்சுக்கிட்டு ஒன்னும் ஆகம இருக்கீங்க?

  41. @@@taaru said...
    ஐயோ.. யாராவது காப்பாத்துங்கய்யா?
    ஊருக்குள்ள ஒரு பய இல்லையா? நான் ஒத்தையில கிடக்கனே...விட்டா கொத்துகறி போட்டுரூவாய்ங்க..///

    டேய் ரெட்டை...கிட்னில ஸ்க்ராச் விழுந்திருந்தா பரவால்லயான்னு அந்த பிகர்கிட்ட போன் போட்டு கேளு..இந்த பய அறுத்துகிட்ருக்கும்போது ரொம்ப ஆட்றான்..! :)

  42. அப்படியே பக்கத்து வீட்டு ஆயா போட்டி(Botti) கேட்டுதுடா....அதையும் கொஞ்சம் பார்சல் பண்ணனும். சரி...டாரு கண்ணுக்கிட்ட இருக்குறது...இந்த நூற்றாண்டு கிட்னியா இல்லை போன நூற்றாண்டு கிட்னியா?

  43. @@@@taaru said...
    ஆமா மச்சி... நீங்க எப்டிடா அந்த கிளிஞ்சத வச்சுக்கிட்டு ஒன்னும் ஆகம இருக்கீங்க?.///

    கன்னி கழியாத மாங்காங்கள அடிச்சு லேசா உப்பு போட்டு மெளகு கலந்து மூணு வேலைக்கு சாப்ட்டா அதுகப்ரம் எந்த பட்டாபட்டியாலையும் நமக்கு ஒன்னும் ஆகாது மச்சி..மாங்காய்க்கு எங்க போவேன்னு கேக்ரியா..கொஞ்ச நேரம் ஆடாம படு சொல்றேன்...! டேய் ரெட்டை ...கால வெட்றா.தனியா துடிச்சிகிட்ருக்கு பாரு.....! :)

  44. Jey says:

    ///@@@taaru said
    ஐயோ.. யாராவது காப்பாத்துங்கய்யா?
    ஊருக்குள்ள ஒரு பய இல்லையா? நான் ஒத்தையில கிடக்கனே...
    யோவ்.. வியாபாரி [அதனப்பா.. பலூன், கக்கூஸ்... புகழ்] நீங்களாவது வந்து காப்பாத்த கூடாதா?
    விட்டா கொத்துகறி போட்டுரூவாய்ங்க.. ..///

    பட்டாபட்டி உடுமலைபேட்டைல ஊஞ்சல் ஆடிட்டிருக்கான்..., மாட்டிகிட்டு இப்ப கூப்பிடு..., வாண்ட்டடா வந்து மாட்டிகிட்டு ஏன் கத்துரே...பேசாம குப்புர படு..., இப்ப ஒன்னும் பண்ண முடியாது...நாங்க வேடிக்கை பாத்துடு போரோம்..

  45. @@@@Rettaival's said...
    அப்படியே பக்கத்து வீட்டு ஆயா போட்டி(Botti) கேட்டுதுடா....அதையும் கொஞ்சம் பார்சல் பண்ணனும்.///

    ஆயாவுக்கு இல்லாத போட்டியா..அப்டியே ரெண்டு கண்ணையும் போட்டில போட்டு குடு...கண்ணு தெரியாத ஆயா பாவம்..தின்னுட்டு போவட்டும்...! :)

  46. வாழ்க்கைல மொதோ முறையா ஒரு மஞ்சக் கலர் கிட்னி பார்க்கிறேன் மச்சி! படம் எடுத்து மாட்டி வைக்கனும்!
    அதை இலுமினாட்டி இன்னும் ஒரு இருவது வருஷம் கழிச்சுப் பார்த்து ரசிச்சு விமர்சனம் எழுதுவான் ..அந்த பதிவை நினைச்சா இப்பொவே எனக்குப் புல்லரிக்குது!

  47. @@@@Rettaival's said...
    வாழ்க்கைல மொதோ முறையா ஒரு மஞ்சக் கலர் கிட்னி பார்க்கிறேன் மச்சி! படம் எடுத்து மாட்டி வைக்கனும்! ///

    ஐயோ கருமம் புடிச்சவனே..அத கீழ போடறா..அது கிட்னி இல்ல..இந்த நாதாரி நேத்து சாப்ட சட்னி...! கிட்னி பீச்சாங்கை சைட் இருக்கு பாரு..! :)

  48. taaru says:

    Rettaival's said...//
    ஏய்.. ஏய்.... டாய்.. வேண்டாம் கிட்னிய தொடாதே...

    மண்டையில இருந்து, காது வழியா வந்து.. மூக்கு மேல வருது .. கோவம்... [இப்போ தெரியுதா எந்த வருசம்ன்னு -பின்-நவீனத்துவம்..ஹஹஹஹஹஹஹாஹ்]

  49. @@@@Rettaival's said...
    வாழ்க்கைல மொதோ முறையா ஒரு மஞ்சக் கலர் கிட்னி பார்க்கிறேன் மச்சி! படம் எடுத்து மாட்டி வைக்கனும்!
    அதை இலுமினாட்டி இன்னும் ஒரு இருவது வருஷம் கழிச்சுப் பார்த்து ரசிச்சு விமர்சனம் எழுதுவான் ..அந்த பதிவை நினைச்சா இப்பொவே எனக்குப் புல்லரிக்குது!////

    ஹா... ஹா... இன்னும் அஞ்சு நிமிசத்துல இலுமினாட்டி வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வருவான் பாரு...! :)

  50. @@@taaru said...
    மண்டையில இருந்து, காது வழியா வந்து.. மூக்கு மேல வருது .. கோவம்... [இப்போ தெரியுதா எந்த வருசம்ன்னு -பின்-நவீனத்துவம்..ஹஹஹஹஹஹஹாஹ்]///

    டேய் ரெட்டை..என்ன மச்சான் இது..அறுத்து வெச்ச தலை மட்டும் தனியா சிரிக்குது...! அந்த சுத்தியல எடு...! :)

  51. அட நாதரி பசங்களா சிபி, சைந்தவி ஜோடிக்கு தனி மரியாதை இருக்கு... டேயிலி எழுதி அதை மொக்கையா மாத்திடுவிங்க போல...

  52. taaru says:

    // Jey said...
    ..நாங்க வேடிக்கை பாத்துடு போரோம்.
    //
    நம்ம ஊர் காரய்ங்க... ரொம்ப தெளிவு..

  53. taaru says:

    போட்டி போட்டின்னு பேசிகிட்டு இருக்கியே ரெட்டை... .என்னா அது? வெளியூர்கிட்ட அது இருக்கா? கொஞ்சம் எடுத்து காட்டேன்?

  54. taaru says:

    //Veliyoorkaran said...
    ஐயோ கருமம் புடிச்சவனே..அத கீழ போடறா..அது கிட்னி இல்ல.
    //
    ங்கோ... சிரிச்சி.. சிரிச்சி.. உருளுறேன்..... கலக்கிட்டே வெளி....
    இது டைமிங்.... [:):):):):)]

  55. Rettaival's said...
    //டாரு சார்! நீங்க சைவமா அசைவமா?//

    இரண்டு பதிவுக்கு முன்னாடி என்ன கேட்ட அதே கேள்வி... taaru சார்....
    இன்னைக்கு நீங்க டர்ர்ர்ர்ர்ர் உங்க டெட் பாடி மேல சலங்கை கட்டி ஆடிட்டுதான் போவானுங்க...

  56. taaru says:

    //TERROR-PANDIYAN(VAS) said
    இன்னைக்கு நீங்க டர்ர்ர்ர்ர்ர் உங்க டெட் பாடி மேல சலங்கை கட்டி ஆடிட்டுதான் போவானுங்க...//

    இவிங்களுக்கு இது புதுசா....இத்தனை நூற்றாண்டா இவிங்கள பாத்துகிட்டு தானே இருக்கோம்... இவிங்களோட speciality ஏ இது தானே... சிறுவர்கள்... எங்க பலூன் மாமா வரட்டும்.. அப்புறம் இருக்கு...!!

  57. அட புத்திசாலி! உங்க பலூன் மாமா தான்டா உன் கிட்னி ஃப்ரை கேட்டதே!

  58. @tarru
    //இவிங்களுக்கு இது புதுசா....இத்தனை நூற்றாண்டா இவிங்கள பாத்துகிட்டு தானே இருக்கோம்... இவிங்களோட speciality ஏ இது தானே... சிறுவர்கள்... எங்க பலூன் மாமா வரட்டும்.. அப்புறம் இருக்கு...!//

    அட போங்க மக்கா உங்க பலூன் மாமவ இதே ப்ளக்ல மூனு நாள் வச்சி அறுத்தாங்க... இப்பவே கிளம்பினா கிட்னி மாட்டும்தான் நஷ்டாம்.

  59. என்னமோ பண்ணிட்டு போங்க.. நானும் ஊருக்கு கிளம்புறேன்... இந்த வாட்டி சண்ட போட்டாவது (கலவரம் நடந்தாலும் பரவாயில்ல) ஒரு கல்யாணத பணிக்கணும்... அதுக்கப்புறம் நான் எழுதுறேன் பாருங்க ஒரு புது காதல் கதை...

  60. @வெறும்பய
    //என்னமோ பண்ணிட்டு போங்க.. நானும் ஊருக்கு கிளம்புறேன்... இந்த வாட்டி சண்ட போட்டாவது (கலவரம் நடந்தாலும் பரவாயில்ல) ஒரு கல்யாணத பணிக்கணும்... அதுக்கப்புறம் நான் எழுதுறேன் பாருங்க ஒரு புது காதல் கதை...//

    என்னானு மச்சி எழுதுவ? சைத்தானின் சாக்கடை பக்கங்கள் அப்படினா? நீ 5 வயசுல உங்க அப்பனுக்கு விஷம் வச்சி பீடி திருட பாத்த பயதான. உங்க அப்பா உனக்கு பொண்ணு அப்படிதான் பாப்பாரு...

  61. ஹ்ம்ம் ஹும்ம் ....,மச்சி டெர்ரர் இது (டாரு) புது பீசு போல ....,கிராமத்தில வளர்ந்தது, நல்ல மூலிகைஎல்லாம் தின்னுருக்கும் நல்லா கொஞ்சம் உப்பு போட்டு உற வைச்சு நம்ம வீடு மேல நாலு நாள் காய போட்டு அப்புறமா பொரிச்சு தின்னா உடம்புக்கு நல்லது
    நினைகிறேன் என்ன சொல்ற நீ ?

  62. @வெறும்பய
    //என்னமோ பண்ணிட்டு போங்க.. நானும் ஊருக்கு கிளம்புறேன்... இந்த வாட்டி சண்ட போட்டாவது (கலவரம் நடந்தாலும் பரவாயில்ல) ஒரு கல்யாணத பணிக்கணும்... அதுக்கப்புறம் நான் எழுதுறேன் பாருங்க ஒரு புது காதல் கதை...//

    என்னானு மச்சி எழுதுவ? சைத்தானின் சாக்கடை பக்கங்கள் அப்படினா? நீ 5 வயசுல உங்க அப்பனுக்கு விஷம் வச்சி பீடி திருட பாத்த பயதான. உங்க அப்பா உனக்கு பொண்ணு அப்படிதான் பாப்பாரு...
    *********************************

    ha ha ha ha ......yov...super ya!

  63. @நரி

    ரத்தவாடை அடிச்சா கரைக்டா வந்துடர...

  64. lighta கிட்னி ,போட்டி வாசனை வந்தது அதான் ...,
    Trustworthiness:
    Vendor reliability:
    Privacy:
    Child safety:

  65. Yov veliyyuru! avanavan singapore la kaanju poi irukkom. Intha nerathula nee vera enya beerla hot la kalakkura.

  66. Nice... keep writing Men...

  67. taaru says:

    //பனங்காட்டு நரி said...
    lighta கிட்னி ,போட்டி வாசனை வந்தது அதான் ...,///
    யோவ் ரத்த வாடை அடிச்சா ஒடனே.. அவளோட ராவுகள்... ச்சீய்...நினைவுகள் போயிருச்சா???
    இருந்தாலும் இங்க [வெளியூரு] வந்தா ஒரு திருப்தி கிடைக்குது..அவ்ளோ சந்தோசம்...

  68. vinu says:

    aang excuse me inga ennamo sandai nadunthuttu irrukkeaa ennathithu




    underware, kidney ellam killinju poi oru dummy piece inga kidukkura maathiri irrukku yaaruthu pa ithu

  69. புதுசா பதிவை போட்டியா ? என்னக்கு 32 minutes முன்னாடி போட்ட மாதிரி காமிக்குது ?

  70. taaru says:

    Google Reader ல புது பதிவு போட்டதாக ஒரு செய்தி இருக்கு?!! இங்க ஒண்ணுமில்ல? என்ன நடக்குது?

  71. யோவ் சைந்தவி என்ன சொன்னாயா ? என்னக்கு இங்க reader ல பதிவு காமிக்குது ...எங்க தொலைஞ்ச வெளியூரு

  72. taaru says:

    நன்றி நரி...!
    தக்காளி!! ஏ வெளியூரு.. எங்கய்யா யா யா யா...... போனே? நீ ஒண்டி சந்தோசமா கடலை போட்டுட்டு இருக்கியா?!! இங்க ஓடியாந்துறு....
    உசிரோட இருக்கும் போதே இந்த புள்ளைய அம்புட்டு புடிக்கும்...சிலு சிலுன்னு பேசும்...இப்போ என்னைய அறுத்து கூறு போட்டப்புறம் ரொம்ப பிடிக்குதுயா? எந்தூருக்கு போயிருந்தாலும் ஒடனே ஒரு குபேட்டா பிடிச்சாவது ஓடி வரணும்...

  73. Unknown says:

    %%%%%%%%%%%%%%%
    @@@@@Ananth said...
    Really nice. Went back to 7 years in memories. Good and keep going.///
    ////////////////////////
    மதுரை பாண்டி said...
    Veliyooru,Story romba nalla iruku.... Waiting for the continuation.////

    யோவ் பட்டாப்பட்டி...இந்த மாதிரி டீசென்ட்டா கமெண்ட் போட்ரவங்கேளுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலையேயா...! இதுக்கு எதுனா பரிகாரம் இருக்கா...? ( ஆமாம், எப்பையா ஊர்லேர்ந்து வருவ நீ...?..) :)

    Aug 31, 2010 5:40:00 PM
    %%%%%%%%%%%%%

    இதுக்கு ஒரு பரிகாரம் இருக்கு. தினமும் காலையில குளிச்சிட்டு பல் விளக்கிட்டு பிளாக்ல எழுதணும். அவ்வளவு தான். அதெல்லாம் நினைச்சாலே கொடூரமா இருக்கில்ல. அப்ப விட்டுருங்க.

  74. படிக்கப் படிக்க அழுகை அழுகையா வருது தம்பி, விடிய விடிய எத்துன தண்ணியும் இறங்கிடிச்சி, கட தொறந்தாச்சு நான் போயி மறுபடி ஏத்திக்கிட்டு வந்து படிக்கிறேன் பங்காளி!

  75. Unknown says:

    Dear Veliyoor....after reading your romantic articles about SAINTHAVI..................don't know what to say....!

    very nice

  76. Blogger Rajkumar said...

    Dear Veliyoor....after reading your romantic articles about SAINTHAVI..................don't know what to say....!

    very nice//


    I know what to say...

    hei..hei..

    Gooooood morning sir...

  77. taaru says:

    பலூன் மாமா பட்டாப்பட்டி...உங்கள நம்பி தான் இங்க வந்தேன்.. கோட் ப்ராமிஸ்......
    இவ்ளோ லேட்டா வாரீரே? உன்கூறு பக்கம் திருவிழா நேரமோ? எல்லா பலூனும் வித்து முடிச்ச அப்புறம் வரீரு?நல்லா இருமைய்யா....

  78. Blogger taaru said...

    பலூன் மாமா பட்டாப்பட்டி...உங்கள நம்பி தான் இங்க வந்தேன்.. கோட் ப்ராமிஸ்......
    இவ்ளோ லேட்டா வாரீரே? உன்கூறு பக்கம் திருவிழா நேரமோ? எல்லா பலூனும் வித்து முடிச்ச அப்புறம் வரீரு?நல்லா இருமைய்யா..
    //

    அட என்னங்க இதுக்கு பீல் பண்ணிக்கிட்டு.. மூகூர்த்ததுக்கு நாள் குறிங்க.. பாலோட வரேன்..ஹி..ஹி..

  79. இவ்வள(லவ்)வு நடந்திருக்கா....? சூப்பர். சைந்'தவி' மாதிரி வேணும்னு எல்லாரையும் தவிக்க விட்டுட்டியே மச்சி...

  80. ரோஸ்விக் said...

    இவ்வள(லவ்)வு நடந்திருக்கா....? சூப்பர். சைந்'தவி' மாதிரி வேணும்னு எல்லாரையும் தவிக்க விட்டுட்டியே மச்சி...
    //


    சரி..சரி.. விடு.. பீல் ஆகாதே...
    பாரு.. எனக்கும் கண் கலங்குது...

  81. அருமையான படைப்பு பின்னி பெடல் எடுதிடிங்க

  82. Selvamani says:

    யோவ் இன்னும் எவ்வளவு நாள் தான் வந்துடு சும்மா போக ?
    ஒழுங்கா அடுத்த போஸ்ட் போடா போறிய இல்லையா ??

  83. taaru says:

    தக்காளி,
    இத்தோட மூணாவது தடவ reader ல ஏமாத்திட்டே மச்சி.....
    உன்னோட சைந்தவி பக்கம் தான் ரொம்ப நாளா unread ப்லோக்கா இருக்கு...நல்லா இரு மச்சி.... பாவம் அந்த புள்ள தான் எவ்ளோ நாள் இப்டியே சும்மா இருக்கும்??? சீக்கிரமா ஒரு போஸ்டிங் போட்டுரு...

  84. ///// தக்காளி,
    இத்தோட மூணாவது தடவ reader ல ஏமாத்திட்டே மச்சி.....
    உன்னோட சைந்தவி பக்கம் தான் ரொம்ப நாளா unread ப்லோக்கா இருக்கு...நல்லா இரு மச்சி.... பாவம் அந்த புள்ள தான் எவ்ளோ நாள் இப்டியே சும்மா இருக்கும்??? சீக்கிரமா ஒரு போஸ்டிங் போட்டுரு.../////

    repeataeeeeeeee