- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 41 comments and to comment




நான்கு மணி நேரத்திற்கு முன் வெளியூர்க்காரனில் போடப்பட்ட ஒரு பதிவை எதேச்சையாய் படித்து காண்டான வெளியூர்க்காரனின் வருங்கால மனைவி வெளியூர்காரனை முரட்டுத்தனமாய் போனில் பிடித்து கண்ணுமண்ணு தெரியாமல் காய்ச்சோ காய்ச்சின்னு காய்ச்சி, தாக்கோ தாக்குன்னு தாக்கியதில் பயந்து குலைநடுங்கி போன வெளியூர்க்காரன் அவர்கள் தான் அறிவித்த ரெண்டு அறிவிப்பையும் வாபஸ் பெற்றுள்ளார்..இனிமேல் தன அப்பாவை பற்றி எழுதினால் மூஞ்சி மோரகட்ட  எல்லாம் பேந்துவிடும் என அவர் மனைவி அன்போடு செல்லமாக அதட்டியத்தில்மாமனாரை தெய்வமாய் மதிப்போர் சங்கம்” பதிவு இத்துடன் கைவிடபடுகிறது என அறிவித்துள்ளார்...மற்றும்சைந்தவியின் சாக்லேட் பக்கங்கள்” பற்றி அடுத்து ஒரு வரி எழுதினால் தங்களுக்கு தினப்படி கிடைக்கும் பல சலுகைகள் தடாலடியாக கட் செய்யப்படும் எனவும் ஒரு குறுந்தகவல் வந்ததால் பயத்தில் பம்மிய வெளியூர்க்காரன் அந்த பதிவிற்கான அறிவிப்பையும் வாபஸ் பெற்றுள்ளார்...இனிமேல் எந்த ஒரு பதிவையும் தங்கள் அனுமதி இல்லாமல் வெளியிடமாட்டேன் என தனது வருங்கால மனைவியிடம் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டுள்ளதாக ஏஜென்சி தகவல்கள் தெரிவிக்கின்றன...!

அவரின் கண்ணீர் பேட்டி இதோ...!

"எவ்ளவோ சொன்னாங்க சார்..ரோஸ்விக்கும், பட்டாபட்டியும்..மாமனார பத்தி எழுதாத எழுதாத...அடக்கி வாசின்னு...பட்டாப்பட்டி ஒரு படி மேல போய் வெளியூர்க்காரன் நாந்தான்னு உங்க பொண்டாட்டிகிட்ட சொல்லிராதீங்கன்னு ஆறு மாசத்துக்கு முன்னாடியே அடிச்சுகிட்டாப்ள...அனுபவஸ்தங்கே சொல்றத கேட்ருக்கணும்...  கேக்கலையே...அய்யோ...எத சொல்ல..என்னத்த சொல்ல..ஒரு மணி நேரம் சார் போன்ல...முடியல..காது ஜவ்வு கிழிஞ்சிருச்சு...போன்லயே இந்த ராடு விழுதே...எப்புடியா நீங்கல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு பொண்டாட்டியோட குடும்பம் நடத்தறீங்க...உங்களுக்கெல்லாம் சூடு சொரணை எதாச்சும் இருக்கா...த்தூ... பொண்டாட்டிக்கு பயந்து  இந்த பொழைப்பு பொழைக்கரதுக்கு ஆம்பளைங்கள்லாம் கேரளாவுக்கு அடிமாடா போயரலாம்யா...!

தக்காளி ப்ளாகும் வேணாம்..ஒரு எழவும் வேணாம்..!

எனக்கு ப்ளாக விட என் வாழ்க்கைதான் முக்கியம்...!"

இப்படிக்கு .

கூடிய விரைவில் அடிமாடாய் கேரளா செல்லுவதற்கு டிக்கெட் எடுத்தவன்..

வெளியூர்க்காரன்..

41 Responses so far.

  1. @@Pattaapatti..//யோவ் பட்டாப்பட்டி..உனக்கு நான் என்னய்யா பாவம் பண்ணேன்..நான் பாட்டுக்கும் இந்த பக்கம் வராமதானையா இருந்தேன்..இதுக்கு பேருதான் கூப்டு வெச்சு ஆப்படிக்கறதா...இது உமக்கே நியாயமா...?? :)

  2. @ Kummi koottam...//
    கும்மியடிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்..வெளியூர்க்காரன் பக்கம் தற்பொழுது அவர் மனைவியின் கண்காணிப்பில் இருப்பதால் தயவு செய்து எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்றி விட வேண்டாம் என தாழ்மையோடு கேட்டுகொள்ளபடுகிறார்கள்..! கடந்த காலங்களில் வெளியூர்க்காரன் செய்த சலம்பல்களை மனதில் வைத்துகொண்டு ஊதி விடவேண்டாம் எனவும் அன்போடு எச்சரிக்கபடுகிரார்கள்...தயவு செய்து இங்கு சாட்டிங் செய்ய வேண்டாம் எனவும் நான் இப்போது சொல்வது புரியாத நண்பர்கள் தயவு செய்து இந்த பதிவை படிக்குமாறும் கேட்டுகொள்ளபடுகிறார்கள்..! :)

    http://veliyoorkaran.blogspot.com/2010/04/blog-post_7845.html

  3. Aba says:

    டேய் வெளியூரு... இதேமாதிரித்தானே நான் ஆன்னிக்கு கேட்டேன்.. என்னைய மன்னிச்சிடுன்னு.. நீ கேட்டியா??என்னோட கமென்டயாடா அழிக்கறே.. மவனே.. மாட்னியா... இனி உனக்கு சங்குதாண்டி... போகப் போகப் பாரு டங்குவாறு அறுந்து விழப்போகுது...

    (கவலைப் படாத வெளியூரு.. கல்யாண வாழ்க்கையில கபடி விளையாடுறவன் நான் இல்ல.. டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி..)

  4. Unknown says:

    வெளியூர்காரரே ,அதான் ஆடக்கூடாது ஆப்பு அடிக்கிறவங்க அடிச்சாதான் உங்களுக்கு அடங்குமடி

  5. அம்மணிக்கு - அடிக்கும்போது கூப்பிடுங்க... நான் உங்களுக்கு உதவி பண்றேன்.
    (அப்புறம் எப்போதான் பழைய கணக்கை தீக்குறது??)

  6. //என்னோட ஸ்கூல் லவ்வ பத்தி சொன்னா அமைதியா கேக்கறா//

    ஆங்!நோட்ஸ் எடுக்குறப்ப எல்லாம் அதுக அமைதியா தான் மச்சி இருக்குங்க.எடுத்துக் காட்டுறப்ப தானடி இருக்கு உனக்கு கச்சேரி...

    //பக்கத்து வீட்ல கூண்டுக்குள்ள இருக்கற லவ் பேர்ட்ஸ் ரெண்டும் நான் ஷூ போடும்போதெல்லாம் என்ன பார்த்து பலிப்பு காமிச்சு கீச்சு மூச்சுன்னு கத்தி டீஸ் பண்ணுது...//

    யோவ்,அடிச்ச கப்புல அதுங்க கதறுனது உனக்கு டீஸ் பண்ற மாதிரி இருக்கா?

    //நைட்ல தூங்க போறப்ப ரூம் மேட்டுக்கு குட் மார்னிங் சொல்றேன்..அவனும் சிரிச்சுகிட்டே குட்மார்னிங்...குட்மார்னிங்..நடத்துடி ராஜா நடத்துன்னு சிரிக்கறான்... ! //

    எங்க ஊர்ல சொல்லுவானுங்க,'பைத்தியக்காரப் பயலுவ எது சொன்னாலும் ஒத்துக்க.இல்லன்னா சட்டைய கிழிச்சு விட்டுட்டு கடிசுருவாணுவ னு...'

    இல்ல,சும்மா சொன்னேன்...

    //சிரிச்சுகிட்டே இருக்கணும்போல தோணுது..திடீர்னு ஓ ன்னு அழ தோணுது..//

    இது ஆரம்ப stage மச்சி..இப்பயே போய் அட்மிட் ஆயிட்டன்னா உசுரும்,மசுரும் மிஞ்சும்...

    //எனக்கே என் ஆள்கிட்ட உடனே பேசணும் போல தோணுது..!//

    பேசுடி,பேசு! எம்புட்டு நாளைக்கு நீ பேசிடப் போற?

    //தப்பிச்சு ஓடிரு ராஜா...உனக்கு "பட்டாப்பட்டி - வெளியூர்காரன் - ரெட்டைவால்ஸ்" போர்க்களத்தோட வரலாறு தெரியாது...! :)//

    இரு மச்சி,பீசு புதுசு இல்ல.நானு சொல்றேன்.
    அஜித் ரசிகன் ஒருத்தன் கெட்ட வார்த்தைல வஞ்சது,வெளி அதை delete பண்ணிட்டு வெக்கமில்லாம சலம்புனது,வர்ரபோற பாட்டி கிட்ட கூட வழிஞ்சது,அதுங்க கூட reject பண்ணின பின்ன வெக்கமே இல்லாம அடுத்த கிழவிய தேடித் போனது,ப்ரோப்ரோஸ் பண்ணின பின்ன அந்தப் பீசுக்கு குழந்தையே இருக்குன்னு தெரிஞ்சு அசடு வழிஞ்சது,தளபதியா இருந்துகிட்டு போர்னாலே மூச்சா போறது,நாலு பேரு சேந்து மிதிச்சாலும் வெக்கமே இல்லாம சலம்புறது,பொறை வாங்க காசு இல்லாம வேல் கம்ப வித்தது....

    இப்படி நெறைய இருக்குயா.உமக்கு என்ன வேணும்னு சொல்லும்.detailed ஆ போட்டுரலாம்.இவன் அழிச்சா பரவா இல்ல.என் ப்ளாக் ல போஸ்ட் போடலாம் மச்சி.... :)


    //டேய் இலுமி இந்த பீசுக்கு மஞ்ச தண்ணி ரெடி பண்ணு ராசா...!//

    அதெல்லாம் எப்பயோ ரெடி.நீ பூஜைய ஆரம்பி விளக்கெண்ண... :)

    ஜெய் செல்லம்.என்னடா டபக்குன்னு நம்மள குறி வக்கானேனு குழம்புதா? எப்பயும் அலெர்ட்டா இருக்கணும்.எந்த ஆடு மாட்டுதோ அதை பொலி போட்டுட்டு போய்கிட்டே இருக்கணும்.இப்ப வெளி மாட்டுனா அவன வெட்டுவேன்,இல்ல நீரு... :)

  7. அடப் பாவிகளா..
    நான் ப்ளாக் எழுத காரணமே மாமனார் சங்கமும், சைந்தவியும் தானே...

  8. அன்னைக்கே சொன்னேன்..
    என்னானா?

    வேல்..வேல்..வெற்றிவேல்னு..கேட்டியா?..

    படு மாமே..

    ஹா..ஹா..

    அத்தலகடி குஞ்சாலா..ஆடும்வரை ஒய்யாலா...

    உய்.....உய்...

  9. நல்ல அடிமாட்டு விலைக்கு வெளியூர்காரன் ப்ளாக் வாங்க நல்ல தருணம்..
    முந்துங்கள்..

    ட்ண்டணக்கா..டணக்குணக்கா...

  10. @All ..///

    எலேய் அயோக்ய படுவாங்களா..இங்க ஒருத்தன் உயிருக்கு போராடிகிற்றுக்கேன்..உங்களுக்கு சந்தோசமா இருக்கா...ங்கொய்யா..பூரா அயோக்ய பயலுகளா இருக்கீங்கலடா ..இவ்ளோ நாள் காவாலி பயலுக சகவாசமா வெச்சிருந்தேன்....! உங்களையெல்லாம் தூக்கி போட்டு...அய்யோயோ ஊர்லேர்ந்து கால் வருதே..டேய் நீங்கல்லாம் சரியான ரௌடிங்களா இருந்தா இங்கயே இருங்கடா ....நான் போய் திட்டு வாங்கிட்டு வந்துடறேன்..வந்து வெச்சிகறேண்டா உங்கள...!! ங்கொய்யா...!

  11. ரோஸ்விக் said...

    அம்மணிக்கு - அடிக்கும்போது கூப்பிடுங்க... நான் உங்களுக்கு உதவி பண்றேன்.
    (அப்புறம் எப்போதான் பழைய கணக்கை தீக்குறது??)///////


    பாஸ் ப்ளீஸ் நானும் வரேன்

  12. அய்யோயோ ஊர்லேர்ந்து கால் வருதே..டேய் நீங்கல்லாம் சரியான ரௌடிங்களா இருந்தா இங்கயே இருங்கடா ....நான் போய் திட்டு வாங்கிட்டு வந்துடறேன்..வந்து வெச்சிகறேண்டா உங்கள...!! ங்கொய்யா...!//////////////////


    போயா போயி போன் பேசிட்டு உயிரோடு இருந்தா வா

  13. Jey says:

    லகலகலகலகககலா.....
    வெளியூரு பயப்படாதயா, ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும், அடி வாங்க.. அடி வாங்க ... அப்புறம் செல்ஃப் லேர்னிங்லேயே சிரிச்சிகிட்டே எப்படி அடிவாங்குரதுனு தெரிஞ்சி போயிரும்.( இந்த மதிரி அடிவங்ரத மட்டும் யாராவது வந்து காப்பாதுவாங்கனு.. எதிர்பாத்து ஏமாந்துராத..). அப்புறம் ரொம்ப இம்ப்பார்டண்டான ஒரு விஷயம், அவுககிட்ட திட்டு வாங்கும்போதோ, அடிவாங்கும் போதோ கொவப்பட்டுராத, முக்கியமா சூடு சொரன இருக்குரமாறி காடிக்கிறாத , அது இன்னும் டேஞ்சர்ல விட்டுரும், அப்புறம் வேப்ப மரத்துல குடியிருக்கிற ஆத்தா நேர்ல வந்தாலும் காப்பாத்த முடியாது. ( சீரியஸா அட்வைஸ் பண்ணும் பீசுகளிடம் வெறித்தனமாய் கொட்டாவி விட்டு நக்கல் அடிப்போர் சங்கம்..சிங்கப்பூர் மாவட்டம்- நு ஒரு சங்கம் வச்சிருகீங்களே... அதே உடனெ கலச்சிருங்க...!!!).

  14. Jey says:

    // Veliyoorkaran said...
    @All ..///

    எலேய் அயோக்ய படுவாங்களா..இங்க ஒருத்தன் உயிருக்கு போராடிகிற்றுக்கேன்..உங்களுக்கு சந்தோசமா இருக்கா...ங்கொய்யா..பூரா அயோக்ய பயலுகளா இருக்கீங்கலடா ..இவ்ளோ நாள் காவாலி பயலுக சகவாசமா வெச்சிருந்தேன்....! உங்களையெல்லாம் தூக்கி போட்டு...அய்யோயோ ஊர்லேர்ந்து கால் வருதே..டேய் நீங்கல்லாம் சரியான ரௌடிங்களா இருந்தா இங்கயே இருங்கடா ....நான் போய் திட்டு வாங்கிட்டு வந்துடறேன்..வந்து வெச்சிகறேண்டா உங்கள...!! ங்கொய்யா...!///

    இன்னும் அடங்கமாட்டேனு அடம்பிடிக்கிறதுல... ஒரு பிரயோசனமும் இல்லடி... மாப்ளேய்....

    டண்டணக்கா...ஏய் டணக்குணக்கா , ணக்கா... ணக்கா...ணக்கா...

  15. வெளியூரு, பட்டா... நம்ம ரோஸ்விக் தம்பியோடத் தான் தங்கியிருக்கேன், நமக்குத்தெரியாமயே இவ்ளோ ரவுசு உட்டுட்டு இருக்கு!

    பிரபாகர்...

  16. // பொண்டாட்டிக்கு பயந்து இந்த பொழைப்பு பொழைக்கரதுக்கு ஆம்பளைங்கள்லாம் கேரளாவுக்கு அடிமாடா போயரலாம்யா...!//

    யப்பா ......போதும் ...வயித்த வலிக்குது சாமிகளா!

  17. அடங்கொக்கமக்க...

    அடி பலமோ....?

  18. என்னா வெளியூரு சவுக்கியமா ?, வூட்டுகாரம்மா எப்படி இருக்காங்கோ ? நீ ஒன்னும் கவலை படாதா , அவுக ஏதாவது டார்ச்சர் பண்ணினாலோ திட்டினாலோ உண்டனே நீ கோபப்பட்டு ஒன்னியும் பண்ணமுடியாது , இந்த ப்ளாக் பன்னாடைக சும்மா உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆகிடுவானுக , நமக்கு இந்த நாயிகளா முக்கியம் , பேசாம போய் வீட்டுக்காரம்மா கிட்ட சரண்டர் ஆகிடு

    இப்படிக்கு
    மானகெட்டு வயித்தை கழுவுவோர் சங்கம்

  19. @@@@@மங்குனி அமைச்சர்
    என்னா வெளியூரு சவுக்கியமா ?, இப்படிக்கு,
    மானகெட்டு வயித்தை கழுவுவோர் சங்கம்./////

    சவுக்கியம் சாமி..!
    -வாய்த்த கழுவ மானத்தை காத்துல விடுவோர் சங்கம்., சிங்கப்பூர் மாவட்டம்.. :)

    (@ ஜெய்...நேத்தே அந்த கொட்டாவி விட்டு நக்கல் பண்ணுவோர் சங்கத்தை அவசரம் அவசரமா கலைச்சிட்டோம் பங்காளி..! ) :)

  20. vinu says:

    vaaaaaaaaaaangu mammu nalla vaaangungooooooooooo

  21. Jey says:

    Veliyoorkaran said...
    (@ ஜெய்...நேத்தே அந்த கொட்டாவி விட்டு நக்கல் பண்ணுவோர் சங்கத்தை அவசரம் அவசரமா கலைச்சிட்டோம் பங்காளி..! ) :)///

    அவ்வளவுதான் தேரிட்ட. அப்புறம் நாங்க ஏற்கனவே சென்னைல ஆரம்பிச்சு ட்ரேட் மார்க்+காப்பி ரைட் வங்கி வச்ச சங்கத்தோட நாமெல சிங்கப்புர்ல ஆரம்பிச்சிருக்கே, அது சட்டப்படி தப்பு, அதனால, ஃபிராஞ்சைஸ் ஃபீஸ் அனுப்பிரு, பாவம் இப்பொதய உன் நிலைமை ரொம்ப பாவமாயிருக்குரதால, ஃபீஸ்ல 50% டிஸ்கவுண்ட்.

    ( இனிமேட்டு யாரவது அடிச்சா சொல்லு , கொன்னுப்புடலாம்.)

  22. Blogger பிரபாகர் said...

    வெளியூரு, பட்டா... நம்ம ரோஸ்விக் தம்பியோடத் தான் தங்கியிருக்கேன், நமக்குத்தெரியாமயே இவ்ளோ ரவுசு உட்டுட்டு இருக்கு!
    //



    ரோஸ்விக்கு தம்பி இருக்காமில்லை..


    சொல்லவேயில்ல...

  23. வலிக்காம அடி வாங்க, மார்க்கெட்ல மருந்து இருக்கா?..

    யாராவது சொல்லுங்களேன்...

  24. @@@பட்டாபட்டி..
    வலிக்காம அடி வாங்க, மார்க்கெட்ல மருந்து இருக்கா?..யாராவது சொல்லுங்களேன்...///

    கோபால் பல்பொடி ..! :)

  25. ஹல்லோ பிரதர்..

    சமீபத்தில..அதாவது செம்மொழி மாநாடு முடிஞ்சபின், உம்ம ப்ளாக்ல ஏதாவது மாறுதல் செய்தீரா?..(Date Format-ல)

    ஏன்னா....

    என்னோட ப்ளாக்ல, நீரு பதிவ போட்டு 2 மாசத்துக்கு மேல ஆச்சுனு சொல்லுது..

    உம்மோட பேர்தான் கடைசியா இருக்கு..

    ஒரு வேளை, எவனாவது செய்வினை செஞ்சுட்டானா..?

    ரெட்டை மேல லைட்டா ஒரு டவுட்..

  26. Jey says:

    பட்டாபட்டி.. said...
    ஹல்லோ பிரதர்..

    சமீபத்தில..அதாவது செம்மொழி மாநாடு முடிஞ்சபின், உம்ம ப்ளாக்ல ஏதாவது மாறுதல் செய்தீரா?..(Date Format-ல)

    ஏன்னா....

    என்னோட ப்ளாக்ல, நீரு பதிவ போட்டு 2 மாசத்துக்கு மேல ஆச்சுனு சொல்லுது..

    உம்மோட பேர்தான் கடைசியா இருக்கு..

    ஒரு வேளை, எவனாவது செய்வினை செஞ்சுட்டானா..?

    ரெட்டை மேல லைட்டா ஒரு டவுட்..////


    3 நாள் வெரதம் இருந்து பூக்குழி இறங்கிட்டா..., எல்லா செய்வினையும் சரியாகிரும்:).

  27. Jey says:

    ///அவளட ராவுகள்...!
    Veliyoorkaran.. - 1 day ago
    நாலு மொழி தெரிஞ்சவன் நாலு பேருக்கு சமம்னு அவ்வையார் ஒரு பாப் ஆல்பத்துல சொல்லிருந்தத படிச்சதுலேர்ந்து வெளியூர்காரனுக்கு மொழிகள் பல கத்துகிட்டு மிகபெரிய பண்டிதனா ஆகணும்கர வெறி அதிகமாய்டுச்சு..அதனால பியுச்ச...///

    என் பிளாக் டேஷ்போர்டுல புது பதிவு போட்டத காட்டுது, ஆனா ஒபென் ஆக மாட்டேங்குது?...:(

  28. @@@@Jey said...
    என் பிளாக் டேஷ்போர்டுல புது பதிவு போட்டத காட்டுது, ஆனா ஒபென் ஆக மாட்டேங்குது?...:(////

    என்னாது காட்டமாட்டேங்குதா...?
    அப்ப போய் சூசைட் பண்ணிக்க மச்சி..! :)

  29. Jey says:

    //Veliyoorkaran to me
    show details 11:53 AM (7 minutes ago)
    Veliyoorkaran has left a new comment on the post "அவசர அறிவிப்பு - வெளியூர்க்காரன்":

    @@@@Jey said...
    என் பிளாக் டேஷ்போர்டுல புது பதிவு போட்டத காட்டுது, ஆனா ஒபென் ஆக மாட்டேங்குது?...:(////

    என்னாது காட்டமாட்டேங்குதா...?
    அப்ப போய் சூசைட் பண்ணிக்க மச்சி..! :) ///


    கொஞ்சம் அசந்தா தூக்குல தொங்க விட்டுட்டு, சூசைடு சொல்லிட்டு போர கும்பல்னு, தெரியும்டி , அலர்டாத்தான் இருக்கோம்...

  30. @@@@Jey said...
    கொஞ்சம் அசந்தா தூக்குல தொங்க விட்டுட்டு, சூசைடு சொல்லிட்டு போர கும்பல்னு, தெரியும்டி , அலர்டாத்தான் இருக்கோம்...///

    யோவ் பட்டாப்பட்டி..யாரோ வெளில நம்ம க்ரூப்ப பத்தி தப்பான வதந்திய கெளப்பி விட்டுட்கிற்றுக்கங்கன்னு நெனைக்கறேன்...!
    இந்த பீசு பச்ச மண்ணை (என்னைத்தான் சொன்னேன் ) போய் சந்தேகப்படுது...! :)

  31. ஹா..ஹா..பச்சமண்ணாமுல்ல ..பச்ச மண்ணு...

  32. ஏம்பா. குடும்ப சாமி , ப்ளாக் கலரை மாத்தச்சொல்லுச்சா?..ஒரே பச்சைமயமாயிருக்கு...

  33. சந்தேகப்படுது...! :)
    Jul 14, 2010 2:37:00 PM
    //

    ஒரு மாறித்தான் திரியரே...
    மணி என்னா?.. தூக்கம் வரலையாக்கும்..

    நீ...... நடத்து சாமி....

  34. Jey says:

    //பட்டாபட்டி.. said...
    சந்தேகப்படுது...! :)
    Jul 14, 2010 2:37:00 PM
    //

    ஒரு மாறித்தான் திரியரே...
    மணி என்னா?.. தூக்கம் வரலையாக்கும்..

    நீ...... நடத்து சாமி....//

    இனிமே தல, இஷ்டத்துக்கு தூங்க முடியுமா...., மனக்கஷ்டத்துல இருக்குற பயபுள்ளயா ரொம்ப கலாய்க்காத பட்டா... பாவம்( பச்ச மண்ணு!!!)

  35. geeyar says:

    நீ ஒன்னும் பயப்படாத வெளியூரு, ஆரம்பத்தில கஸ்டமா இருக்கும். அப்புறம் பழகிடும். 1 வருசத்திலே நானே பழகிட்டேனா பாரேன்.

  36. Jey says:

    நலம். நலமரிய ஆவல்:)

  37. Jey says:

    பங்காளி, புதுசா ப்திவு போட்ருகேன், படி....

  38. நல்ல அடிமாட்டு விலைக்கு வெளியூர்காரன் ப்ளாக் வாங்க நல்ல தருணம்..
    முந்துங்கள்..

    ட்ண்டணக்கா..டணக்குணக்கா...

    Final Rate IRR 2808985.00 or SOS 122777100.00 or AED 1000.00

    DEAL AAA?

  39. அனைவரும் வருக! வெளியூருக்கு ஆதரவு தருக!

    http://rettaivals.blogspot.com/2010/07/blog-post_24.html

    இது சாம்பிள்..

    எ) மாமனார் என்பவர்
    1.மனைவியின் அப்பா
    2.உலகத்துலயே மகா ஏமாளி.நம்மளை நம்பியும் பொன்னு கொடுத்த , கொடுக்கப்போற அப்பாவி
    3. மாமான்னா ஏட்டைய்யா...மாமனார்னா , வயசான ஏட்டைய்யாவா?

  40. வெளியூர்கரனின் வேண்டுகோளுக்கு இணங்கி மேலும் சில கேள்விகள்...

    பிகர் என்பது ?

    1.அழகான பெண்.

    2.கண்ணுல படுற எல்லாமே.முக்கியமா,செருப்பால் அடிக்குற எல்லாருமே..


    காதல் என்பது?

    1.உன்னதமான விஷயம்.

    2.பார்த்த ரெண்டாவது நொடியிலேயே வர்றது.நாரத்தனமா அடி வாங்கினாலும் ,வெக்கமே இல்லாமல் செய்வது.
    ஆனா,முடிவை எல்லாம் கேக்கக் கூடாது.


    ஆடு வெட்டு என்பது?

    1.கோவிலில் செய்வது.

    2.வர்ற போறவனை எல்லாம் இழுத்துப் போட்டு கலாய்ப்பது.

    சின்னத் தளபதி என்பவர்?

    1.எந்த எழவெடுத்த நாயோ?

    2.தானைத் தலைவனின் தங்க மகன்.

    செருப்பு என்பது....

    1.கால்ல போடுறது.

    2.கன்னத்தில் படுவது.