“நாளைக்கு காலைல பத்து மணிகெல்லாம் அவங்க வந்துருவாங்க..இன்னிக்கே வெங்கட்டு ஐயர் கடைலேர்ந்து ஸ்வீட் காரம்லாம் மறந்துறாம வாங்கிட்டு வந்துருங்க..மொதோ மொதொள்ள நம்ப சைந்தவிய பொண்ணு பார்க்க வர்றாங்க..இந்த எடமே எப்டியாச்சும் தெகைஞ்சிரனும்..”..ஏதேதோ வேண்டிகிட்டே அங்கயும் இங்கயும் பதட்டமா அலைஞ்சுகிட்ருந்த என் அம்மாவ பார்த்தப்போ எனக்கு அவ முதுக புடிச்சு தொங்கி திட்டு வாங்கணும் போல இருந்துச்சு...நான் இன்னொருத்தனுக்கு கல்யாணம் பண்ணி குடுக்கற அளவுக்கு எப்போ வளந்தேன்..இப்பயுமே என் அப்பா முறைச்சு பார்த்தா எனக்கு அழுக வருமே...!
சிபியோட போட்டோவ இருபத்தி எட்டாவது தடவையா யாருக்கும் தெரியாம எடுத்து பார்த்தேன்..இருபத்தி எட்டாவது தடவையா நல்லாருந்தான்..ஸ்டுடியோல போய் கோட் போட்டு புல் மேக்அப்ள போட்டோ எடுத்து அனுப்பாம எதோ பங்சன்ல எடுத்தத அனுப்பிருந்தாங்க.ரொம்ப மேன்லியா இருந்தான்.எனக்கு உடனே அவன நேர்ல பார்க்கணும் போல இருந்துச்சு..மனசு வெக்கபட்டுகிட்டே என்கிட்டே கேட்டுச்சு..இவன லவ் பண்ண ஆரம்பிக்கவான்னு..நான் தலைல அடிச்சுக்கிட்டே ச்சே ச்சே அதெல்லாம் நடந்தா பார்த்துக்கலாம்னு போட்டோவ திரும்ப உள்ள வெச்சுட்டு திரும்புனப்போ எங்கம்மா சிரிச்சுகிட்டே என்கிட்டே கேட்டா..”என்னடி மாப்ளைய ரொம்ப புடிச்சிருக்கா”ன்னு .. அய்யோ..!
காலைல நாலு மணிகெல்லாம் அம்மா எந்திரிச்சு வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டா..எனக்குதான் தூக்கமே வரல...”மாப்ள ரொம்ப இயல்பா இருப்பாப்லாயாம் ..அதனால ரொம்ப மேக்அப்ளாம் வேண்டாம். சிம்பிளா பண்ணிக்க போதும்”னு அம்மா வந்து சொல்லிட்டு போனா..வெளில என் மாமா எங்கப்பாகிட்ட சொல்லிகிட்ருந்தாறு “மாப்ள ரொம்ப ஜாலியான டைப்பாம் அத்தான் ..சிரிக்க சிரிக்க பேசுவாப்லயாம்..அவரு பிரெண்ட்ஸ் வட்டாரத்துல விசாரிச்சப்ப சொன்னாங்க..அவங்க குடும்பத்துல எல்லாரும் ரொம்ப நல்ல மாதிரியாம்...நம்ப சைந்தவி ரொம்ப குடுத்து வெச்சவ....!”
என்னங்கடா இது ஆளாளுக்கு பேசி இவங்களே கல்யாணத்த முடிச்சிருவாங்க போல..இன்னும் அரை மணி நேரத்துல மாப்ள வீட்லேர்ந்து வந்துருவாங்க. ப்ளூ கலர் பட்டுபுடவைல மேக்அப்ளாம் போட்டுட்டு உக்காந்துருந்தேன்..சிபி போட்டோவ பார்க்கணும் போல இருந்துச்சு..ச்சே வேணாம்..அதான் நேர்ல பார்க்கபோரனே ..பேனாவ எடுத்து நெகத்துக்கு கீழ குட்டியா "சிபி" ன்னு எழுதி பார்த்தேன்...சிரிப்பு வந்துச்சு..கொஞ்சம் வெக்கமும்.. என்னையே அறியாம என் விரலுக்கு முத்தம் குடுத்தேன்..குடுத்துட்டு ச்சீ அலையாதடி சைந்தவின்னு நாக்க கடிச்சுகிட்டேன்...நான் காபி குடுத்தப்ப என் வெரல் நுனில உன் பேர எழுதிருந்தனே பார்த்தியாடான்னு கேக்கணும்..கல்யாணத்துக்கு அப்பறம்..! ச்சே அவங்க இன்னும் வரவே இல்ல அதுக்குள்ள என்னென்னமோ இமேஜின் பண்றேன் ..
கார் வந்துடுச்சு யாராரு வந்துருக்காங்கன்னு ரூம்லேர்ந்து பார்க்க முடியல...நாலஞ்சு பேரு வந்துருப்பாங்களா இருக்கும்...வாங்க வாங்கன்னு எங்கப்பா எல்லாரையும் வழிஞ்சு வழிஞ்சு கூப்டுகிட்ருந்தாறு ..எங்கம்மாவ திட்டும்போது எங்கப்பா குரல் எப்டி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன்..தான் பொண்ணோட வாழ்க்கைனா எப்டியெல்லாம் மாறிடறாங்க ஆம்பளைங்க...!
எங்கப்பா எல்லாரையும் உக்காருங்கன்னு சொல்லிகிட்ருந்தப்ப திடீர்னு ஒரு குரல்.."சும்மா வெக்கபடாம நீங்களும் வந்து உக்காருங்க மாமா...நமக்குள்ள என்னன்னு." எது யாரோட குரலா ..இந்த நாய்தான்..எங்க வீட்ல வந்து உக்காந்துகிட்டு எங்கப்பாவையே வெக்கபடாம உக்காருங்கன்னு சொல்லிகிட்ருந்தான் எருமை ...எங்கப்பா அப்போ சிரிக்க ஆரம்பிச்சாரு...ஒரு அரை மணி நேரம் எல்லாரும் என்னை மறந்துட்டாங்க ..பேசிகிட்டே இருந்தான்..என் மாமாவுக்கு அவன் பேசுன பேச்சுல சிரிச்சு சிரிச்சு அவர் கண்ணுலேர்ந்து தண்ணி வந்துருச்சு..போதும் மாப்ள விட்ருங்கன்னு அவன்கிட்ட கெஞ்ச ஆரம்பிச்சிட்டாரு...அய்யோ என்ன கூப்டுங்கடா நான் வந்து என் புருசன பார்க்கனும்னு கத்தனும் போல இருந்துச்சு...கூப்ட்டாங்க..
“மாப்பிள்ளைய பார்த்து வணக்கம் சொல்லுமா”ன்னு ஒரு சவுண்ட்.
எங்கப்பா..!
நிமிந்து பார்த்தேன்..
ப்ளூ கலர் செக்டு ஷர்ட், ப்ளாக் கலர் ஜீன்ஸ் போட்டுகிட்டு சோபால உக்காந்துருந்தான் என் சிபி...ரொம்ப சுப்பர்லாம் இல்ல...பட்,நல்லா இருந்தான் ...மறுபடியும் ஒரு தடவ நிமிர்ந்து பார்க்க வெக்கற அளவுக்கு...!
காபி குடுத்தேன்...படு டீசெண்டா வாங்கிகிட்டான்..அழகா சிரிச்சுகிட்டே ஜெண்டிலா தேங்க்ஸ் சொன்னான்..வேற எதாச்சும் பேசுவான்னு நெனச்சேன்..ஒண்ணுமே சொல்லல.. !
எனக்கு உடனே மனசுக்கு தோனுச்சு..இவதான் என் புருசன்னு.. இவன்கூட இப்போவே கெளம்பி போய்டலாம்னு... நானும் என் புருசனும் இருக்கப்போ எதுக்கு இவ்ளோ பேரு தேவை இல்லாம இங்க இருக்காங்கன்னு நெனைச்சுகிட்டே என் அப்பாவ பார்த்தேன்..என் அப்பா எனக்கு சொந்தகாரர் மாதிரியே தெரிய ஆரம்பிச்சாரு...!
டேய் தம்பி போய் சைந்தவி கூட ஒரு வார்த்தை பேசிட்டு வந்துடு..என் மாமா சொன்னது என் காதுல விழுந்துச்சு..அயோயோ ..எல்லார்கிட்டயும் இவ்ளோ நல்லா பேசுறானே..நம்மகிட்ட எப்டி பேசுவான்...சாமி நான் உளறி கொட்டாம இருக்கணும்னு நெனைச்சுகிட்டே ரெண்டு பெரும் பின்னாடி தோட்டத்துக்கு போனோம்...
ஆனா, அங்க உளறி கொட்னது..!
...ச்சாக்லேட் பக்கங்கள் தொடரும்.,
வெளியூர்க்காரன்