- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 84 comments and to comment


“நாளைக்கு காலைல பத்து மணிகெல்லாம் அவங்க வந்துருவாங்க..இன்னிக்கே வெங்கட்டு ஐயர் கடைலேர்ந்து ஸ்வீட் காரம்லாம் மறந்துறாம வாங்கிட்டு வந்துருங்க..மொதோ மொதொள்ள நம்ப சைந்தவிய பொண்ணு பார்க்க வர்றாங்க..இந்த எடமே எப்டியாச்சும் தெகைஞ்சிரனும்..”..ஏதேதோ வேண்டிகிட்டே அங்கயும் இங்கயும் பதட்டமா அலைஞ்சுகிட்ருந்த  என் அம்மாவ பார்த்தப்போ எனக்கு அவ முதுக புடிச்சு தொங்கி திட்டு வாங்கணும் போல இருந்துச்சு...நான் இன்னொருத்தனுக்கு கல்யாணம் பண்ணி குடுக்கற அளவுக்கு எப்போ வளந்தேன்..இப்பயுமே என் அப்பா முறைச்சு பார்த்தா எனக்கு அழுக வருமே...!

சிபியோட போட்டோவ இருபத்தி எட்டாவது தடவையா யாருக்கும் தெரியாம எடுத்து பார்த்தேன்..இருபத்தி எட்டாவது தடவையா நல்லாருந்தான்..ஸ்டுடியோல போய் கோட் போட்டு புல் மேக்அப்ள போட்டோ எடுத்து அனுப்பாம எதோ பங்சன்ல  எடுத்தத அனுப்பிருந்தாங்க.ரொம்ப மேன்லியா இருந்தான்.எனக்கு உடனே அவன நேர்ல பார்க்கணும் போல இருந்துச்சு..மனசு வெக்கபட்டுகிட்டே என்கிட்டே கேட்டுச்சு..இவன லவ் பண்ண ஆரம்பிக்கவான்னு..நான் தலைல அடிச்சுக்கிட்டே ச்சே ச்சே அதெல்லாம் நடந்தா பார்த்துக்கலாம்னு போட்டோவ திரும்ப உள்ள வெச்சுட்டு திரும்புனப்போ எங்கம்மா சிரிச்சுகிட்டே என்கிட்டே கேட்டா..”என்னடி மாப்ளைய ரொம்ப புடிச்சிருக்கா”ன்னு .. அய்யோ..!

காலைல நாலு மணிகெல்லாம் அம்மா எந்திரிச்சு வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டா..எனக்குதான் தூக்கமே வரல...”மாப்ள ரொம்ப இயல்பா  இருப்பாப்லாயாம் ..அதனால ரொம்ப மேக்அப்ளாம் வேண்டாம். சிம்பிளா  பண்ணிக்க போதும்”னு அம்மா வந்து சொல்லிட்டு போனா..வெளில என் மாமா எங்கப்பாகிட்ட சொல்லிகிட்ருந்தாறு “மாப்ள ரொம்ப ஜாலியான டைப்பாம் அத்தான் ..சிரிக்க சிரிக்க பேசுவாப்லயாம்..அவரு பிரெண்ட்ஸ் வட்டாரத்துல விசாரிச்சப்ப சொன்னாங்க..அவங்க குடும்பத்துல எல்லாரும் ரொம்ப நல்ல மாதிரியாம்...நம்ப சைந்தவி ரொம்ப குடுத்து வெச்சவ....!”

என்னங்கடா இது ஆளாளுக்கு பேசி இவங்களே கல்யாணத்த  முடிச்சிருவாங்க போல..இன்னும் அரை மணி நேரத்துல மாப்ள வீட்லேர்ந்து  வந்துருவாங்க. ப்ளூ கலர் பட்டுபுடவைல மேக்அப்ளாம் போட்டுட்டு உக்காந்துருந்தேன்..சிபி போட்டோவ பார்க்கணும் போல இருந்துச்சு..ச்சே வேணாம்..அதான் நேர்ல பார்க்கபோரனே ..பேனாவ எடுத்து நெகத்துக்கு கீழ குட்டியா "சிபி" ன்னு எழுதி பார்த்தேன்...சிரிப்பு வந்துச்சு..கொஞ்சம் வெக்கமும்..   என்னையே அறியாம என் விரலுக்கு முத்தம் குடுத்தேன்..குடுத்துட்டு ச்சீ அலையாதடி சைந்தவின்னு  நாக்க கடிச்சுகிட்டேன்...நான் காபி குடுத்தப்ப என் வெரல் நுனில உன் பேர எழுதிருந்தனே பார்த்தியாடான்னு கேக்கணும்..கல்யாணத்துக்கு அப்பறம்..! ச்சே அவங்க இன்னும் வரவே இல்ல அதுக்குள்ள என்னென்னமோ இமேஜின் பண்றேன் ..

கார் வந்துடுச்சு யாராரு வந்துருக்காங்கன்னு ரூம்லேர்ந்து பார்க்க முடியல...நாலஞ்சு பேரு வந்துருப்பாங்களா இருக்கும்...வாங்க வாங்கன்னு எங்கப்பா எல்லாரையும் வழிஞ்சு வழிஞ்சு கூப்டுகிட்ருந்தாறு ..எங்கம்மாவ திட்டும்போது எங்கப்பா குரல் எப்டி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன்..தான் பொண்ணோட வாழ்க்கைனா எப்டியெல்லாம் மாறிடறாங்க ஆம்பளைங்க...!

எங்கப்பா எல்லாரையும் உக்காருங்கன்னு சொல்லிகிட்ருந்தப்ப திடீர்னு  ஒரு குரல்.."சும்மா வெக்கபடாம  நீங்களும் வந்து உக்காருங்க மாமா...நமக்குள்ள என்னன்னு."  எது யாரோட குரலா ..இந்த நாய்தான்..எங்க வீட்ல வந்து உக்காந்துகிட்டு எங்கப்பாவையே வெக்கபடாம உக்காருங்கன்னு சொல்லிகிட்ருந்தான் எருமை ...எங்கப்பா அப்போ சிரிக்க ஆரம்பிச்சாரு...ஒரு அரை மணி நேரம் எல்லாரும் என்னை மறந்துட்டாங்க ..பேசிகிட்டே இருந்தான்..என் மாமாவுக்கு அவன் பேசுன பேச்சுல சிரிச்சு சிரிச்சு அவர் கண்ணுலேர்ந்து தண்ணி வந்துருச்சு..போதும் மாப்ள விட்ருங்கன்னு அவன்கிட்ட கெஞ்ச ஆரம்பிச்சிட்டாரு...அய்யோ என்ன கூப்டுங்கடா நான் வந்து என் புருசன பார்க்கனும்னு கத்தனும் போல இருந்துச்சு...கூப்ட்டாங்க.. 

“மாப்பிள்ளைய பார்த்து வணக்கம் சொல்லுமா”ன்னு ஒரு சவுண்ட்.

எங்கப்பா..!

நிமிந்து பார்த்தேன்..

ப்ளூ கலர் செக்டு ஷர்ட், ப்ளாக் கலர் ஜீன்ஸ் போட்டுகிட்டு சோபால உக்காந்துருந்தான் என் சிபி...ரொம்ப சுப்பர்லாம் இல்ல...பட்,நல்லா இருந்தான் ...மறுபடியும் ஒரு தடவ நிமிர்ந்து பார்க்க வெக்கற அளவுக்கு...!

காபி குடுத்தேன்...படு டீசெண்டா வாங்கிகிட்டான்..அழகா சிரிச்சுகிட்டே ஜெண்டிலா தேங்க்ஸ் சொன்னான்..வேற எதாச்சும் பேசுவான்னு நெனச்சேன்..ஒண்ணுமே சொல்லல.. !

எனக்கு உடனே மனசுக்கு தோனுச்சு..இவதான் என் புருசன்னு.. இவன்கூட இப்போவே கெளம்பி போய்டலாம்னு... நானும் என் புருசனும் இருக்கப்போ எதுக்கு இவ்ளோ பேரு தேவை இல்லாம இங்க இருக்காங்கன்னு நெனைச்சுகிட்டே என் அப்பாவ பார்த்தேன்..என் அப்பா எனக்கு சொந்தகாரர் மாதிரியே தெரிய ஆரம்பிச்சாரு...!

டேய் தம்பி போய் சைந்தவி கூட ஒரு வார்த்தை பேசிட்டு வந்துடு..என் மாமா சொன்னது என் காதுல விழுந்துச்சு..அயோயோ ..எல்லார்கிட்டயும் இவ்ளோ நல்லா பேசுறானே..நம்மகிட்ட எப்டி பேசுவான்...சாமி நான் உளறி கொட்டாம இருக்கணும்னு நெனைச்சுகிட்டே ரெண்டு பெரும் பின்னாடி  தோட்டத்துக்கு போனோம்...

ஆனா, அங்க உளறி கொட்னது..!

...ச்சாக்லேட் பக்கங்கள் தொடரும்.,  

வெளியூர்க்காரன் 

Posted by Veliyoorkaran - - 27 comments and to comment


நான்தான் சார் சிபி,

பியர் பிரியாணி பீடான்னு வாழ்ந்துக்கிட்டு இருந்த ஒரு பையன்...கோக், பிஸ்ஸா, பபிள்கம்னு மாறின கதைதான் என்னோடது!
எனக்கு இந்த உலகத்துல மொத்தம் மூனு விஷயம்
பிடிக்கும்ங்க. .
1.சைந்தவி...2.லவ்...3.சைந்தவியோட லவ்.
சில பேருக்கு லவ் அட் பர்ஸ்ட் சைட்ல  நம்பிக்கை இருக்கும்.சில பேர் அப்பா அம்மா பார்க்கிற பொண்ணுங்ககிட்ட கூட காலம் பூரா கவித்துவமா வாழ்வாங்க.உண்மை என்னன்னா நாங்க இதுல எந்த ரகம்னு எனக்கே சொல்லத் தெரியலை. Why Because, am a Blessed child of Destiny..!

சத்யம், மாயாஜால் , ஐனாக்ஸ்னு சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருந்த போது தான் அந்த ஃபோன் கால் வந்தது..!

"சிபி..! அம்மா பேசறேன்டா.சனிக்கிழமை புறப்பட்டு ஊருக்கு வந்துடு.பக்கத்து ஊர்ல உனக்கு பொன்னு பார்த்து வச்சிருக்கோம்.நீயும் ஒரு எட்டு பார்த்துட்டேன்னா பேசி முடிச்சுடலாம்!"

"அம்மா நோ..நோ..எனக்கு இப்போ கல்யாணம் வே...."

"ந்தா அப்பா பேசறாராம்...!"

"என்னடா...!! ஒழுங்கா வந்து சேரு!".

அப்பா முகம் ஒரு நிமிஷம்  வலது மூளைக்குள் வந்து போனது.இனி பேசி டைம் வேஸ்ட். ஊருக்கு போகும் போது பஸ்ஸில் தூக்கமே வரலை.

"ஹாய்! ஜெஃப்ரி ஆர்ச்சர் படிப்பீங்களா?

"கடைசியா என்ன படம் பார்த்தீங்க?

"ஸ்போர்ட்ஸ் பிடிக்குமா? "

இதுக்கெல்லாம் என்ன பதில் கிடைக்கும்?ம்ஹூம்!

"ரமணி சந்திரன் ,அவள் விகடன், ஸ்நேகிதி  படிப்பேன்.நீங்க சொல்ற ரைட்டரெல்லாம்தெரியாது.!"
"கடைசியா பார்த்த படம் கண்டேன் காதலை!"

"ஸ்போர்ட்ஸெல்லாம் அவ்வளவா தெரியாது.கிரிக்கெட் சுத்தமா பிடிக்காது.எல்லாம் ஒரே ஃபிக்ஸிங்".

இப்படித்தானே இருக்கப் போகிறது. அப்பனை நினைத்தால் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.மீசை தடித்த செங்கிஸ்கான்.இன்னும் என்னென்னவோ திட்டலாம் அந்தாளை.விண்ணைதாண்டி வருவாயா கார்த்திக்குக்கு கிழக்குச் சீமையிலே விஜயகுமார் மாதிரி ஒரு அப்பா இருந்தா எப்படி இருக்கும்? அப்படிதாங்க எனக்கும்! என்ன கொடுமை இதுன்னு பார்க்கறீங்களா? 

அப்பேற்பட்ட ஒரு மகாத்மா எனக்கு பொன்னு பார்த்தா எப்படி இருக்கும்? எப்படியும் ஏதோ ஒரு கைநாட்டை என் தலைல கட்டி வைக்க போறானுங்கன்னு எரிச்சலா வந்தது. வேணாமுன்னு சொல்லலாம்னு பார்த்தா எங்கப்பன் மீசை குளோசப் ஷாட்டில வந்து எகிறுவான். தக்காளி எதுக்கு பிரச்சினையை வாரிக்கொட்டிக்கிட்டு...கழுதை போவோம்..பார்த்த உடனே நடையைக்கட்டிட்டு வந்துடுவோம்னு போனேன்.

பேரென்னப்பா?

சைந்தவி!

நம்ம ஊர்ல இப்படி பேரெல்லாம் வைக்கிறானுங்களா?

டிபிகல் மல்லிகைபூ பட்டுபுடவை வாசனைக்கு நடுவுல திடுதிப்புனு

"மாப்பிள்ளைய பார்த்து வணக்கம் சொல்லுமான்னு ஒரு சவுண்ட்.(நம்ம பூர்ணம் விஸ்வநாதன்- - மாம்ஸ்!). நிமிர்ந்து பார்த்தா...

அசப்புல கலாப காதலன் படத்துல வர்ற ரேணுகா மேனன் மாதிரி ஒரு பொண்ணு . சுத்தமா அந்த இடத்துக்கே சம்மந்தமில்லாத மாதிரி! எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை.

எங்கப்பா கூட கொஞ்சம் தனியா பேசணும்னு சொன்னேன். பொசுக்குனு எல்லாபயலும் சிரிச்சுட்டானுங்க. உலகத்துலயே பொன்னு பார்க்க வந்து தான்  அப்பன் கூட தனியா பேசணும்னு சொன்ன ஒரே பேக்கு நானாதான் இருப்பேன்னு நினைச்சுட்டானுங்க போல .முதல்ல பொன்னு கூட ரெண்டு வார்த்தை பேசிட்டு வா"ன்னாரு  மீசை.

தோட்டத்துல கிணத்தடிக்கு அனுப்புனானுங்க.

இந்த ராட்சசிக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை. மெதுவா ஆரம்பிச்சேன்

"Ah Well....என்ன மாதிரி புக்ஸ் படிப்பீங்க ? நிமிர்ந்து பார்த்தா.

"ம்ம்ம்..ருஷ்டி! ஷெல்டன் அப்புறம் ஜெஃப்ரி ஆர்ச்சர்!
The Enchantress of Florence படிச்சுட்டு இருக்கேன் இப்போ!"

எனக்கு தொடை லேசா நடுக்க ஆரம்பிச்சுது..!

"கடைசியா என்ன படம் பார்த்தீங்க ?"

"The Break up Plan.ஜென்னிஃபர் லோபஸுக்கு வயசாயிடுச்சுல்ல. உங்களுக்கு ஸ்போர்ட்ஸ் பிடிக்குமா .ரஃபேல் நடால் மேட்ச்னா மிஸ் பண்ண மாட்டேன். ஸாக்கர்ல இந்த தடவை ஜெர்மனி தான்.."

நான் இன்னும் பஸ்ல தூங்கிட்டு தான் இருக்கேனா? இது நிஜம்தானா! வரப்பட்டிக்காட்டுக்குள்ள ரஃபேல் நடாலா?உண்மை தானா...இல்லை ஏதாவது தேவதை ..வரம் டகால்டியா.! அட நிஜந்தான்!நம்ம பூர்ணம் விஸ்வநாதன் டென்ஷனா இருக்காரே. ஆனா இந்த ராட்சஸி முகத்துல அரை இன்ச் டென்ஷன் கூட காணொமே!

இப்போ எனக்கு வாயும் வார்த்தையும்  ரொம்ப ரோலிங் ஆக ஆரம்பிச்சது.

"போதுங்க... இதெல்லாம் கனவா நனவான்னு தெரில..."

கலகலன்னு ஒரு சத்தம்... பக்கத்துல இருந்த மல்லிகை பூ செடி இவ சிரிச்ச அழகு சிரிப்புல வெக்கப்பட்டு தலைகுனிஞ்சுகிச்சு.. மாமரத்துல ஒரு பட்சி உக்காந்து இவதாண்டா இவதாண்டா விட்றாதன்னு கத்துச்சு...(தக்காளி அந்த பட்சியதான் இன்னும் தேடிகிட்ருக்கேன்...)
"வேணும்னா கிள்ளிப்பார்த்துக்கங்க".மறுபடியும் சிரிச்சா.

சட்டுனு அவளோட உள்ளங்கையை கிள்ளப் போனேன்.அப்போ சிவந்தது பாருங்க அவ முகம்...அதுக்காகவே எனக்கு  ரெண்டாவதுல பாடம் சொல்லிக்கொடுத்த கணக்கு வாத்தியார்ல இருந்து என்னோட இப்போதைய  ரீஜினல்  மானேஜர் வரைக்கும் எவனை வேணும்னாலும் போட்டுத் தள்ளலாம்.

நேரா மீசைகிட்ட போனேன் .சிரிச்சார். கிழக்குச் சீமையிலே விஜயகுமாருக்குள்ளயும் ஒரு மணிரத்னம், வஸந்த் பட அப்பா ஒளிஞ்சிருக்கார்னு அன்னிக்குதான் தெரிஞ்சது!

எப்படி என் செலெக்ஷன்ங்கிற மாதிரியான பார்வை.

"என்னடா பொண்ணு  ஓ.கே வா?"

"எப்பா..என்னை பெத்ததுக்கப்புறம் உன் வாழ்க்கைலயே இப்போதான் உருப்படியான காரியம் பண்ணியிருக்கே! அந்த புள்ளையை கூப்பிட்டு இப்படியே நம்ம வீட்டுக்குப் போயிடுவோம்..வாப்பா"

எத்தனை தடவை சொன்னாலும் சலிக்காத கதை. ஓ.கே  பாஸ்... கிச்சன் ல டம் டும்னு சத்தம் கேக்குதா! அவதான். அவளுக்கு இந்த ஜென்மத்துல வராத பாதாம் அல்வாவை முப்பதியேழாவது  முறையா ட்ரை பண்ணிட்டு இருக்கா. விதி....நான் இதை சாப்ப்டே ஆகனும். சரிங்க நான் இப்போ வெளில கெளம்பறேன்...சீக்கிரம் திரும்ப சந்திப்போம்...!
அதுவரைக்கும் ஜாலியா  லவ் பண்ணிட்டு இருங்க!

.......................................................(Chocolate பக்கங்கள் தொடரும்)


                                                    - By Rettaival's 
                                      

Posted by Veliyoorkaran - - 40 comments and to comment


கொஞ்ச நேரம் சும்மா இருடா டேய்..ஐயோ எழுத விடுறா எருமைமாடு...இவன் எப்பவுமே இப்டிதாங்க...சரியான அறுந்த வாலு.. சும்மாவே இருக்க மாட்டான் பன்டி ...! சரி நான் விசயத்துக்கு வர்றேன்..என் பேரு சைந்தவி..சிபியோட வொயிப்  ..இல்லை இல்லை...சிபியோட செல்ல காதலி..ஆமாம்..நாங்க ரெண்டு பெரும் இப்பவும் லவ் பண்ணிகிட்ருக்கோம்..எனக்கு இந்த உலகத்துல ரொம்ப புடிச்ச விஷயம் நாலுங்க...மொதோ ரெண்டு விஷயம் என் சிபிய உயிருக்குயிரா காதலிக்கறது, மூணாவது விஷயம் இவன பத்தியே நெனைச்சிகிட்ருக்கறது ...நாலாவது இவன பத்தி எதாச்சும் என் டைரில எழுதி வெக்கறது... லைப்ல இருக்கற ரொம்ப அழகான விசயங்கள்ல ஒன்னு மனசுக்கு புடிச்சவங்கள பத்தி டைரில எழுதி வெச்சு, கொஞ்ச நாள் கழிச்சு  தனியா உக்காந்து ரசிச்சு படிக்கறது.! நல்ல அடைமழை நேரத்துல நைட்ல வீட்டு ஜன்னல் ஓரமா நின்னு மழைய வேடிக்க பார்த்துகிட்ருக்கற  லவ்வர பின்னாடிலேர்ந்து கட்டிபுடிச்சு சூடா ஐ லவ் யு சொல்றமாடி ஒரு ஜில் பீலிங் அது.. !


என் டைரிய இதுவரைக்கும் என் சிபியே படிச்சது கெடயாது..நீங்க படிக்க போறீங்க...நான் அவன்கிட்ட படிக்க சொல்லி  குடுக்கவும் மாட்டேன்...குடுத்தா அதையும் கன்னாபின்னான்னு கிண்டல் பண்ணி சிரிப்பான் பொருக்கி..என் டைரில நான் என்னென்னமோ கிறுக்கி வெச்சிருப்பேன்..ஆனா, எல்லா கிறுக்கல்லையும் என் சிபி இருப்பான்..என் செல்ல புருஷன்.. இவன ஸ்வீட் ராஸ்கல்னு சொன்னா பத்தாதுங்க..இவன் அதுக்கும் மேல..அதுக்காக இவன சினிமால வர்ற ரொமண்டிக் ஹீரோ மாதிரின்னு நெனைச்சிடாதீங்க..நான் ஐ லவ் யூ சொன்னா திரும்ப ஐ லவ் யூ சொல்லனும்னு கூட தெரியாம ஓகே ஓகே தேங்க்ஸ்ன்னு சொல்ற மடையன் இவன்..யாரையாச்சும் கிண்டல் பண்ணனும்னா மட்டும் இவனுக்கு வாய் வங்காளம் முட்டும் விரியும்...ஆனா ஒழுங்கா ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம ஒரு ஐ லவ் யூ சொல்ல வராது...ஏண்டா ஒரு தடவ கூட ஐ லவ் யூ சொல்ல மாட்டேங்கறேன்னு கேட்டா வெக்கமா இருக்குடின்னு சொல்லி வழிவான்..!


ஆனா நல்லவன்...சரியான வாலு..இப்போ ரூம்ல உள்ள தூங்கிகிட்ருக்கான் ..திடீர்னு ஒருநாள் என் வாழ்க்கைக்குள்ள  வந்து அதே வேகத்துல என் வாழ்க்கையாகி போனவன்.  எனக்கு கலைஞர் அடுத்த எலெக்சன்ல ஜெயிக்கிறாரா, எந்திரன் படம் ஓடுமா,சச்சின் எப்போ  அடுத்த செஞ்சுரி அடிப்பாரு இது எத பத்தியும் கவலை இல்ல..எனக்கு என் சிபி ஆபிஸ் முடிஞ்சு சீக்கிரம் வீட்டுக்கு வந்துரனும், என் கூடவே இருக்கணும், அது போதும்..அவனோட விளையாண்டுகிட்டே அவன் அடிக்கற ஜோக்குக்கு சிரிச்சுகிட்டே அடுத்த நாள் அவன ஆபிஸ்க்கு அனுப்பனும்.அனுப்பிட்டு எப்படா அஞ்சு மணி வரும் என் சிபி வருவான்னு வெயிட் பண்ணனும்..இதுதான் என் சந்தோசம், என் ஆசை, என் வாழ்க்கை, எல்லாமே...!

இவன பேச விட்டா பேசிகிட்டே இருப்பான்..ஒரு நாளைக்கு முப்பது ஜோக் சொல்லுவான்..எங்கதான் இவனுக்கு இவ்ளோ ஜோக் கெடைக்குதோ தெரியாது..என்கிட்டே உனக்கு என்னடா புடிச்சிருக்குன்னு கேட்டா நீ கோவத்துல சொல்ற மயிறுதாண்டின்னு சொல்லி சிரிப்பான்.ஒரே ஒரு சிகரெட் அடிக்கறதுக்கு என்கிட்டே பெர்மிசன் வாங்க கூச்சமே இல்லாம என் காலுல விழுந்து கெஞ்சி சிரிக்க வெச்சிருவான்......நைட் மூணு மணிக்கு எந்திருச்சு உக்காந்து என் முகத்தையே பார்த்து ரசிச்சிட்ருப்பான் ..அது தூங்கற உனக்கு  எப்டி தெரியும்னு கேக்காதீங்க..எனக்கு தெரியும்..என் சிபி எப்போ என்ன பண்ணாலும் எனக்கு தெரியும்..!


அயோயோ சொல்ல மறந்துட்டனே என் குடும்பத்துல இவன் வாய்ல விழாத ஆளே கெடயாதுங்க...எல்லாரையும் நாராசமா கலாய்ப்பான்..அதுவும் எங்கப்பான்னா இவனுக்கு அவ்ளோ புடிக்கும்..ரசிச்சு ஒட்டுவான்...எங்கப்பா போட்டோவ பார்த்தாலே இவனுக்கு சிரிப்பு வந்துரும்..டேய் பாவம்டா வயசானவர் விட்ருடான்னு சொன்னாலும் கேக்கமாட்டான்..உங்கப்பன கிட்டத்துல பார்த்தா பூர்ணம் விஸ்வநாதனுக்கே உங்கப்பன கலாய்க்கனும்னு தோணும்டின்னு சொல்லி  ஓட்ட ஆரம்பிச்சிருவான்.ஐயோ எவ்ளோ கெஞ்சினாலும் விடமாட்டான்...பாவி...!


ஒரு நிமிஷம் இருங்க..எரும இப்போ  என்ன எழுதவிடாம அரைதூக்கத்துல  ஏதேதோ பேச ஆரம்பிச்சிருச்சு..ஏய் சொல்ல மறந்துட்டனே..இவன் பேச ஆரம்பிச்சிட்டா என்ன சொன்னாலும் இவன் வாய மூட முடியாது.ஆனா ஒரு விரல வாய்ல வெச்சு பச்சபுள்ளைங்கள  மெரட்ற மாதிரி ஒரு வார்த்தை சொன்னா மட்டும் அப்டியே முயல்குட்டி மாதிரி திருதிருன்னு முழிச்சிட்டு அப்டியே தூங்கிருவான்.இருங்க சொல்லிட்டு வந்துடறேன்...!


ஏய் சிபி...


உஷ் பேசாத...! தூங்கு.!


தொடரும்....! 
------------------------------------------------------------------------------------------------------------------------

சைந்தவி - சிபி காதல் ஜோடியின் அறிமுகம் இல்லாத நண்பர்கள் ரெண்டு விஷயம் பண்ணுங்க..பர்ஸ்ட் கீழ இருக்கற இந்த இந்த மூணு லிங்கயும் படிங்க..ரெண்டாவது உடனே உங்க மனசுக்கு புடிச்சவங்களுக்கு போன் பண்ணி சும்மா உன் குரலை கேக்கணும் போல இருந்துச்சு அதான் போன் பண்ணேன்னு சொல்லி அவங்க எதிர்பார்க்காதப்போ சர்ப்ரைசா ஒரு ஐ லவ் யூ சொல்லுங்க...அது நைட் மூணு மணியா இருந்தாலும் சரி.. ஏன்னா  காதலுக்கு வாட்ச் கட்ட தெரியாது சார்...நம்ம இஷ்டத்துக்கு எப்போ வேணா காதலிக்கலாம்...!
------------------------------------------------------------------------------------------------------------------------





ஒரு சின்ன இன்ட்ரோ., 

இப்டி ஒரு பொண்ணு நமக்கு கெடைக்காதான்னு எல்லா பசங்களையும் ஏங்க வெக்கற ட்ரீம் கேர்ல் நம்ம சைந்தவி...ச்சே செம பையன்ப்பா சிபி.. சைந்தவி செம லக்கினு அத்தன பிகருங்களையும் பொறாமைப்பட  வெக்கற சாக்லேட் பையன் சிபி..கியூட் ரொமாண்டிக் கப்புள்ஸ்..இவங்க ரெண்டு பேரும்தான் சார் நம்ம கதைக்கு ஹீரோ ஹீரோயின்...இந்த கதைய தொடரா நானும் ரெட்டைவால்சும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி  எழுதுனோம்..எல்லாரும் சேர்ந்து எங்க ரெண்டு பேரையும் வாரி அணைச்சு கண்ணுல ஒத்திகிட்டீங்க..எங்க எழுதுக்கள நீங்க இன்னும் ரசிக்கறீங்கங்கறதுக்கு   ஒரு உதாரணம் ஒரு வருசத்துக்கு முன்னாடி எழுதுன பதிவுகளுக்கு முந்தாநேத்து வரைக்கும் வந்துகிட்ருக்க ரசனையான கமெண்ட்ஸ்..அதான் ஒரு சின்ன ஆசை...செகேன்ட் ரவுன்ட் ட்ரை பண்ணலாமேன்னு...அதுக்கு முன்னாடி  இதையும் படிச்சு பாருங்க.. படிச்சிட்டு சொல்லுங்க...!


------------------------------------------------------------------------------------------------------------------------
வெளியூர்க்காரன்