யானை தன் தலைல தானே மண்ணை வாரி போட்டுக்கும்னு கேள்விபட்ருக்கேன் ..ஆனா, மண்ணை மட்டும்ல இப்ப இருக்கற ஒரு யானை கல்லறையவே தனக்குதானே கட்டிக்கும்ங்கரத நேர்ல பார்த்துட்டேன்...வணக்கம் ஜெயலலிதா..நீங்க பன்னத பைத்தியகாரதனம்னு சொல்லி பைத்தியகாரங்கள கேவலபடுத்த நான் விரும்பல...அவங்க சில சமயமாச்சும் புத்திசாலித்தனமா நடந்துக்குவாங்க...! இப்டி லட்டு மாதிரி அமைஞ்ச கூட்டணிய கலைய விட்டுட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க மாட்டாங்க.. !
துக்ளக் சோ ராமசாமியோ , மைத்ரேயனோ, இல்ல நீங்க அன்னவுன்ஸ் பண்ணுங்க.கிரகம் நல்லாருக்கு...எல்லா தொகுதிலயும் அதிமுக கண்டிப்பா ஜெயக்குதுன்னு உங்களுக்கு அரசியல் ஆருடம் சொன்ன ஜோசியக்காரனோ வோட்டு போட போறதில்ல மேடம் உங்களுக்கு..மக்களும் உங்களையே நம்பிகிட்ருக்கற தொண்டனும்தான்.. நேத்து வெச்சு அடிச்சீங்க பார்த்தீங்களா செருப்பால..தமிழ்நாட்ல இருக்கற ஒவ்வொரு அதிமுககாரனும் இப்ப என்ன பண்றதுன்னு தெரியாம மனசுக்குள்ள புளுங்கிகிட்டு செத்து போய் கெடக்குறான்.. அட விடுங்க..நீங்க என்னிக்கு தொன்டன பத்தியெல்லாம் கவலைபட்ருகீங்க..!
கூட்டணி கட்சிகளை நீங்க செருப்பால அடிக்கறதும் அவனுக கோச்சுகிட்டு போறதும், அடுத்த எலெக்சன்ல மறுபடியும் வந்து உங்க காலுல விழுகறதும் தமிழக அரசியல்ல மிக சாதாரணமான ஒரு நிகழ்வு..உங்க கோண புத்தி அதாங்கறது இங்க இருக்கற எல்லாருக்குமே தெரியும்..ஒரு கூட்டணிய கூட ஒழுங்கா நிர்வகிக்க தெரியாத ஒரு பொம்பள எப்புடி அரசாங்கத்த நிர்வகிக்க போறாங்கற கேள்விய கூட விட்டு தள்ளுங்க..,
உங்களையே நம்பி ஒரு மனுஷன் நீங்க செரமபடரபல்லாம் பக்கபலமா கூடவே இருந்தாரே..மேடைக்கு மேடை அன்பு சகோதரி அன்பு சகோதரின்னு உருகுனாரே...திரு வை.கோ...அவர மதிச்சிருக்க வேணாம்..மத்த கட்சிகள் எலேக்சனுக்காக மட்டும்தான் உங்களோட கூட்டு வெச்சுது...அவரு அப்டியா பண்ணாரு..,இதுதான் உங்களுக்கு தெரிஞ்ச அரசியல் நாகரீகமா...அவர் கேட்ட தொகுதிகள்ல பாதியாச்சும் குடுத்துருக்க வேணாம்..இதுதான் அஞ்சு வருஷம் உங்கள நம்பி தன்னோட அரசியல் வாழ்கைய தியாகம் பண்ணவருக்கு செய்ற நன்றி கடனா...?
உங்கள நம்புன அவருக்கே இந்த கதின்னா..உங்கள நம்புனா எங்க கதி...?
கேக்றேன்னு தப்பா நெனைச்சுகாதீங்க..,
பொம்பளையா நீ...?