- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 126 comments and to comment




இவருதாங்க வசந்த கால பறவை...இவரு வலைப்பூ ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆகுது...ஆனா, இவரு ரொம்ப நல்லா எழுதுவாருங்கர மேட்டர் பதிவுலகத்த விடுங்க...இன்னும் இவருக்கே சரியா தெரியாது...நேத்து வந்த பதிவர் கூட பதிவெழுதி   நல்லா சோக்கா  வன்புணர்ச்சி பண்ணுவான்..ஆனா இவருக்கு இது குத்துமதிப்பா கூட பண்ண வராது...பதிவுலகத்துல ஜிஞ்சா அடிக்கறதுன்னா என்னா பாஸுன்னு பச்சபுள்ளதனமா கேப்பாரு...நாலு பேரோட கூட்டு சேர்ந்துகிட்டு அரசியல் பண்ணதெரியாத பச்ச மண்ணு...மீ த பர்ஸ்ட்ன்னு எந்த ஒரு பதிவுலயும் இவரோட பார்மாலிட்டி கமெண்ட்ட நான் பார்த்ததில்ல...!

வலைப்பூவுல வோட்டு பட்டன்ன்னு ஒன்னு வெக்கனும்கர மேட்டரே இவருக்கு இன்னும் தெரியாது...என் பதிவ வந்து படிங்கன்னு எவன் பதிவுலயும் போய் பிச்சை எடுக்க மாட்டாரு...பெண்ணடிமைத்தனத்த தொழில் நேக்கா பதிவுக்கு எடைல திணிக்க இவருக்கு சுத்தமா தெரியாது...முக்கியமா புனைவு எழுதறேங்கர பேர்ல வாந்தி எடுத்து அத காய வெச்சு பதிவா மாத்தி போஸ்ட் பண்ண தெரியாது...பெண் பதிவர்கள் கிட்ட சாட் பண்ணிட்டு அந்த சாட் ஹிஸ்டரிய  எடுத்து போஸ்ட் பண்ணி இவ என்கிட்டே அப்டி பேசுனா...டைப் பண்ணும்போது முதுக சொரிஞ்சுகிட்டா...இப்டி எல்லாம் சில்லியா எழுத வராத கண்ணியமான மனுஷன்...இவருக்கு என்னதான் வரும்னு கேக்றீங்களா...பாவம் இந்த  மனுஷனுக்கு நல்லா வர்றது ஒன்னே ஒன்னுதாங்க...!


தங்கமா எழுதுவாரு...ரொம்ப எளிமையா...கதர் சட்டைய அயன் பண்ணி போட்ட மாதிரி கண்ணியமான வரிகள்..நான் எழுதுனதுன்னு அவரு புள்ளைங்ககிட்ட பத்து வருஷம் கழிச்சு  கம்பீரமா சொல்லிக்கற மாதிரி...படிச்சுகிட்டே இருக்கலாம்...இவரோட சில காதல் பதிவுகள படிச்சிட்டு நீங்க போட்ருக்கற சட்டைய கழட்டி புழிஞ்சிங்கண்ணா  காதல் சொட்டும்..அதுவும் வெக்கபட்டுகிட்டே சொட்டும்...அவ்ளோ ரசனையான எழுத்துக்கள்.! 

நீங்களே சொல்லுங்க சார்..நல்லா எழுதற ஒரே ஒரு திறமைய  மட்டும் வெச்சுக்கிட்டு எப்டி சார் இவரால தமிழ் பதிவுலகத்துல  பிரபல பதிவரா வரமுடியும்...என்ன பொருத்தவரைக்கும் ரொம்ப நாளைக்கு முன்னாடியே மிகபிரபலமான பதிவரா வர வேண்டிய, அதுக்கு எல்லா தகுதியும் இருக்கற,ஆனா இப்போ மிக சுமாரான பேரோட இருக்கற வெளியூர்க்காரனோட பாவரைட் பதிவர்...வசந்த கால பறவை சிவா....


உங்ககிட்ட ஒரு சின்ன வேண்டுகோள் சிவா...எல்லாருக்கும் புடிச்ச சைந்தவியின் சாக்லேட் பக்கங்கள்ல நானும் ரெட்டைவால்சும் சில பக்கங்கள்ல இதுவரைக்கும்  எழுதிருக்கோம்...எல்லாரும் படிச்சு ரசிச்சிருக்காங்க...எனக்கு சாக்லேட் பக்கங்கள உங்க வரிகள்ள படிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு..வெளியூர்க்காரன்கர ஒரு சின்னமரக்கிளைல  வசந்த கால பறவை கொஞ்ச நேரம் உக்காரணும்....!


எழுதுங்களேன் ப்ளீஸ்...


இது சைந்தவி பத்தின தொடர்பதிவேல்லாம் இல்ல சாமி...!


வெளியூர்க்காரன்கர ஒரு நேர்மையான ரசிகன் வசந்த கால பறவைங்கற  ஒரு தரமான எழுத்தாளன்கிட்ட கேக்கற ஒரு நியாயமான நேயர் விருப்பம்...! 

---------------------------------------------------------------------------------------------------------------------
இப்போ சில காக்காய்ங்களுக்கு .,  


அந்தரங்கம், தன்மானம், சுயகவுரவம் .இதெல்லாம் எல்லாருக்கும் இருக்கு சார்..யாருக்கு இல்ல...உங்களுக்கும் இருக்கு எனக்கும் இருக்கு..ஏன்யா பச்சபுள்ளதனமா அடிச்சுக்கறீங்க..படிச்சவன்தான நீங்கல்லாம்...அசிங்கமா இல்ல...பதிவுல இந்த மாதிரி சண்டை போட்டுக்க....பெரிய மனுஷன் மாதிரி பீகேவ் பண்ணுங்கையா..எழுத்தாளர் ஜெயகாந்தன்லேர்ந்து கவிஞர் வைரமுத்து வரைக்கும் எழுத்துல சாதிச்சவங்கல்லாம்  அமைதியாத்தான் இருக்காங்க.. தக்காளி பதிவுலக எழுத்தாளர்ங்கற பேர்ல நீங்க போடற சத்தம்தான் இங்க தாங்க முடியல...போனைவு எழுதறேன் மயிர புடுங்கறேன்னு எதாச்சும் உளறிகொட்டி எழுதி வெச்சு ஏன்யா எல்லார் மானத்தையும் வாங்கறீங்க...!

பெண் பதிவர்கள பத்தி நான் ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல...ஏன்னா,பத்து நாள் நல்லா பேசிட்டு பதினோராவது நாள் இப்போ மணி என்னாம்மா ஆச்சுன்னு கேட்டா வெளியூர்க்காரன் வன்புணர்ச்சி பண்றான்னு அங்க போய் கம்ப்ளைன்ட் பண்ணுவீங்க...அங்க உடனே பஞ்சாயத்து போர்டு ப்ரெசிடென்ட்ங்கல்லாம் சொம்ப தூக்கிட்டு வந்து வெச்சுகிட்டு அதிசய லொட்டயா  என்ன ஏதுன்னு விசாரிக்காம உங்களுக்கு சாதகமா தீர்ப்பு சொல்லுவாங்க...எடைல இருக்கற அல்லகைங்கல்லாம் அதிசிய மசுரா பதிவு போட்டு கண்டனம் தெரிவிக்கும்...அதனால நீங்கல்லாம் முடிஞ்சா திருந்துங்க...இல்லைனா அப்டியே போயிருங்க...!   


யோவ் பட்டாப்பட்டி...இந்த மாதிரி பிரச்சனைல  எடைல பூந்து  ஊதிவிட்டு பெருசாக்கி வெளாட்ற பன்னாடைங்கல்லாம் என்னிக்கோ நம்மகிட்ட வசமா சிக்கராணுக....!


அன்னிக்கு இருக்குடி  மாப்ள நம்ம ஆட்டம்....! 


வெளியூர்க்காரன்