இனிமே எந்த தமிழ் படத்துலயும் பஞ்ச் டயலாக் இருக்காது...கைய முறுக்குனா நரம்பு ஏறாது, ஒரே பாட்ல ஹீரோ பணக்காரன் ஆக மாட்டாரு,மொத்ததுல இனி வரும் தமிழ் படங்கள்ல அடுத்த தளத்த எதிர்பார்க்கலாம்....ஏன்னா இதுக்கு மேல உதைக்க முடியாதுங்க தமிழ் படங்கள்ல...படம் நாசமா இருக்கு...கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்...ஆனா இந்த படத்துக்கு போகும்போது நெறைய சினிமா பார்க்கற நண்பர்களோட போங்க..அப்பத்தான் யார கலாய்க்கறாங்கன்னு புரியும்...எனக்கு பின் சீட்ல ஒரு பொண்ணு உக்காந்து அவங்கம்மாக்கு சொல்லிட்டே இருந்தா..படத்த விட அது நல்லா இருந்துச்சு.. யிஷுன் தியேட்டர்ல...அந்த புள்ளைக்கு ஒரு தேங்க்ஸ்.
தமிழ் படத்த போட தமிழ் படம் வந்தா மாதிரி...தமிழ் ப்ளாக போட இதோ வந்துடுச்சு தமிழ் ப்ளாகு...இத படிச்சிட்டு கோவம் வர்றவங்க என்ன உங்க தம்பியா நெனைச்சு மன்னிச்சிட்டு தயவு செஞ்சு போய் நல்ல கயிரா வாங்கி தூக்குல தொங்கிடுங்க...ஏன்னா இதுல உங்கள பத்திதான் எழுதிருக்கேன்...கோவம் வராத மாதிரி நடிச்சிட்டு மாப்ள சூப்பர்டா பின்னிட்டேன்னு பின்னூட்டம் போடறவங்க வீட்டுக்கு போய் யாருக்கும் தெரியாம நடுமண்டைல குட்டிக்கங்க ..இப்ப சம்பவத்துக்கு போவோம்..
பதிவுலகத்த விட்டு விலக போறேன்னு அறிவிக்கறது...
இந்த கூட்டத்துல சில வெங்காயங்க ஆ ஊன்னா உடனே அவன் என்ன திட்டிட்டான்.. இவன் என்ன பத்தி தப்ப எழுதிட்டான்....அதனால நான் பதிவுலகத்த விட்டு விலக போறேன்னு விறைப்பா நிக்கறதும்,உடனே அந்த கூமுட்டைய போய் நாலு நாசமா போனவங்கே சமாதானபடுத்தி கூட்டிட்டு வர்றதும் ஒரு வாடிக்கையாவே நடந்துகிட்டுருக்கு...ஏன்யா இப்டி பண்றியே...மனுசன்தான நீங்கல்லாம்...அண்ணாச்சியே விருப்பபட்டு போறேன் இனிமே எழுதமாட்டேன்னு சொல்லும்போது நீங்க ஏன்யா குறுக்க பூந்து கொழப்பறீங்க...போய் தொலையுது எழவெடுத்த சனியன்னு தலமுழுகிட்டு அடுத்த பதிவ போய் படிக்க வேண்டியதுதான..அதெல்லாம் பதிவெழுதி என்னத்த சாதிச்சு கிழிக்க போகுது.... எஸ்.ராமகிருஷ்ணன் வீட்டு கத்திரிக்கா ரேஞ்சுக்கு சலம்ப வேண்டியது..சரக்கு இருக்கறவன் சலம்ப மாட்டான்யா...இனிமே எவனாச்சும் போறேன்னு அறிவிச்சா உடனே போடா நாயேன்னு துரத்தி விட்ருங்க...
பின்னூட்ட கொசுங்க...
போறேன்னு சொல்ற சைக்கோவ கூட மன்னிச்சு விட்டர்லாம்..லூசு தாழ்வு மனப்பான்மைல உளருதுன்னு..ஆனா இந்த மொக்கையா பின்னூட்டம் போடறாங்கே பாருங்க...அவங்கெல எல்லாம் மவுண்ட் ரோட்ல ஜட்டியோட ஓட விட்டு முட்டிக்கு கீழ குறி வெச்சு தப்பு தப்பா கண்ட எடத்துல சுடனும்....படிச்சு பாரு..புடிச்சிருந்த புடிச்சிருக்குன்னு எழுது...புடிக்கலேன்னா இழுத்து போட்டு உதை...அதென்ன கழுதை பார்மாலிட்டி பண்றது...அவன் போன்ற மொக்கைக்கு இவன் போய் அருமை அற்புதம் அழகு மயிறு மட்டைன்னு பின்னூட்டம் போடவேண்டியது...இவனுக்கு அவன் வந்து பார்மாலிட்டி பண்றது..பதிவுலகத்துல நெஜமாவே நல்லா எழுதற எழுத்தாளர்கள் வெளில தெரியாம போறதுக்கு காரணம்...இந்த நான்சென்சுங்க கெளப்பற நாயிஸ்தான்..எலேய்..இந்த பார்மாலிட்டி பண்ற நோன்னைங்களுக்கு ஒன்னு சொல்லிக்கறேன்..பூமா தேவி கூடிய சீக்கிரம் சிரிக்க போறா...நீங்கல்லாம் உள்ள போக போறீங்க..அப்ப உங்களையெல்லாம் பார்த்து வாயால சிரிக்கமாட்டேன்டி மாப்ளைங்களா...
சினிமா விமர்சனம் பண்றது....
சினிமா விமர்சனம்ங்கர பேர்ல இவங்கே பண்ற அக்கப்போரு..அய்யோயோ... இதுல ஒரு அண்ணாச்சி ஒரு விளம்பர படம் எடுத்து கூட நான் பார்த்ததில்ல..ஆனா பெரிய நோன்னையாட்டமா படத்த அலசுவாக.இது நொட்டை..அது நொட்டைன்னு..ஏன்யா இந்த விளம்பரம்.இதுல மானம் கெட்டுபோய் மொதோ ஷோவ வேற கடன் வாங்கி டிக்கெட் எடுத்து பார்க்கவேண்டியது...கேட்டா கலா ரசிகர்களாம்..மொதொல்ல போய் குளிங்கடா...அப்பறம் வந்து விமர்சனம் எழுதலாம்....
வோட்டு போட சொல்லி கெஞ்சறது....
வோட்டு போட சொல்லி கெஞ்சறது...பதிவோட கடைசீல மறக்காம வோட்ட போட்டுட்டு போங்கன்னு ஒரு கட் அவுட்டே வெச்சுருபாங்கே...நான் என்ன சொல்றேன்...இந்த பொழைப்பு பொழைக்கரதுக்கு மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்ல போய் துண்ட வாங்கி விரிச்சு பிச்சை எடுக்கலாம்..ஒரு பதிவு எழுதறியா...வோட்டு பட்டன வை...படிச்சிட்டு புடிகறவன் வோட்டு போட போறான்..புடிகாதவன் உன்ன கெட்ட வார்த்தைல மனசுக்குள்ள திட்டிட்டு வெளில போக போறான்..ஏன்யா மானம் கேட்டு போய் எல்லார்கிட்டயும் கெஞ்சற...
அவார்டு குடுத்துக்கறது....
மல்லாக்க படுத்து விட்டத்த பார்க்கும்போது மேல என்னென பூச்சி தெரியுதோ அந்த பூச்சி பேர்ல எல்லாம் அவார்டு குடுத்துக்க வேண்டியது...கரப்பான் பூச்சி அவார்டு,மூட்ட பூச்சி அவார்டு,கம்பளி பூச்சி அவார்டுன்னு...பதிலுக்கு அவுக இவுகளுக்கு தேங்க்ஸ் தெரிவிச்சு ஒரு எட்டுகால் பூச்சி அவார்டு குடுப்பாக..மாத்தி மாத்தி பாராடிக்குவாங்கே...நன்றி சொல்லிக்குவாங்கே..இந்த கருமத்த நம்ப படிக்கணும்....இவனுக தூங்கும்போது மூக்குக்குள்ள பூரான புடிச்சு விடனும்..அப்பத்தான் திருந்துவாங்கே....
கவிதை எழுதறது..
உனக்கென்ன வருதோ அத நீ ஒழுங்கா செய்யணும்...வினுச்சக்கரவர்த்தி பஞ்ச் டையலாக் அடிச்சா நீ ஒத்துக்குவியா...காந்திமதி கிளாமர் காமிச்சா...ஒதுக்கமாட்டேள்ள..அந்த மாதிரிதான எங்களுக்கும்..என் உனக்கு வராத ஏரியால உள்ள பூந்து வாந்தி எடுத்து வெக்கற...கவிதை எழுத வரலேன்னா விட்டு தொலையேண்டா எழவெடுத்தவனே...இதெல்லாம் எழுதுனாதான் உன்ன மிக பெரிய பதிவர்னு ஒத்துக்குவோம்னு உன்ட்ட யாராச்சும் சொன்னங்கேலா...இல்லைல..அப்பறம் ஏன்டா சுத்தி இருகவன சாவடிக்கற நாதாரி...
பொண்ணுங்களோட பதிவுக்கு போய் ஜொள்ளு விடறது...
ஒரு நாதாரி சிறுக்கி பெண்ணுரிமைன்கர பேர்ல எதெதையோ வாமிட் பண்ணி வெச்சுருக்கா.. ஆணுரிமைய பறிக்கரதுதான் பெண்ணுரிமைன்கர மாதிரி ஏதேதோ செக்ஸ பத்தியெல்லாம் எழுதி பினாத்தி வெச்சுருக்கா..அதுல நம்ம சொட்ட மண்டை பதிவர் போய் பின்னூட்டம் போட்ருகாறு..சகோதரி உங்க உணர்வுகள் எனக்கு புரியுது...அதே நேரத்துல எங்க உணர்வுகளுக்கும் நீங்க மரியாதை குடுக்கணும்..தங்கள் எழுத்துக்கள் அருமை...தொடர்ந்து சேவை ஆற்றுங்கன்னு...அவ எழுத்துல நீ என்னத்த அருமைய கண்டுட்ட..என் உணர்வுக்கு மரியாதை குடுன்னு நீ ஏன் அவகிட்ட போய் கெஞ்சற..சும்மா எதாச்சும் எழுதனுமேன்னு உளறி வெக்கறது...அந்த சிறுக்கி இன்னும் ஓவரா எழுதுவா...எனக்கு தெரிஞ்சு சில பதிவர்கள் நெஜமாவே ரொம்ப அருமையா எழுதறாங்க..தரமா எழுதறாங்க.அவங்கள போய் பாராட்டு..அவங்க வளரட்டும்..அவங்க வளரனும்...ஏன் மொக்க பதிவுக்கெல்லாம் பின்னூட்டம் போட்டு உங்க வேல்யுவ குறைச்சுகறீங்க..
கேங்கு வெச்சுக்கறது...
டேய் க்ரூப் சேர்த்துகிட்டு அலையற நோன்னைகளா..ஏடிஎம்கேவே அட்ரஸ் இல்லாமா போச்சுடா..போங்கடா...போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கடா...நீங்க பெரிய எழுத்தாள முட்டகோசு. உங்க சத்துக்கு நாலு வெத்து கோழிங்கள குரூப் சேர்த்துகிட்டு பெரிய சாகித்ய அகாடமி ரேஞ்சுக்கு விவாதம் பண்ண வேண்டியது...நீங்கல்லாம் கொசு கடிச்சுதாண்டா சாவ போறீங்க...
பதிவுலகே கதின்னு கெடக்கற நண்பர்களுக்கு ஒரு வார்த்தை..
அண்ணேன் போய் தூங்குன்னேன்...!!!
கடைசியா ஒரு வார்த்தை...
ஹி..ஹி..எப்டி சொல்றதுன்னு தெரில...ஹி..ஹி..படிச்சிட்டு உங்க கருத்த இங்க பின்னூட்டத்துல போட்டுட்டு போங்கன்னேன்..ஹி..ஹி...கடைசியா இன்னொரு விஷயம்...ஹி..ஹி..அப்படியே....ஹி..ஹி.. மறந்துடாம அப்டியே வோட்ட போட்டுட்டு போயடுங்கன்னேன்...ஹி..ஹி...
(யோவ் பட்டாபட்டி..கயறு வாங்கி அனுப்புயா...நான் மானஸ்தன்...)
வெளியூர்க்காரன்..